Monday, 22 June 2015

மதிப்பீடு

                                                     மதிப்பீடு


                               மாதவியாயினும்
                    மாடியில் வாழ்ந்தால்
                    கண்ணகிப் பட்டம்…!

                             கண்ணகியாயினும்
                   குடிசையில் வாழ்ந்தால்
                   மாதவிப் பட்டம்…!

                    இது நான் முதல் முதலில் எழுதிய கவிதையாகும். இக் கவிதை 1992 ஆம் ஆண்டு குமரிமாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட “சிற்ப வெளிச்சம்” என்னும் கவிதை நூலில் பிரசுரமானது.

     இக் கவிதையின் பொருள்:  ஒரு பெண் எவ்வளவுதான் ஒழுங்கீனமாக நடந்தாலும் அவள் மாடமாளிகையில் வாழ்ந்தால் இச்சமூகம் அவளை, கண்ணகியைப் போன்று கற்புடையவள் என்று புகழும்.


     ஒரு பெண் எவ்வளவுதான் கற்புடையவளாக இருந்தாலும், அவள் ஓலைக் குடிசையில் வாழ்ந்தால்  அவளை மாதவியைப் போன்று மாசுடையவள் என்றே தூற்றும்.           

No comments:

Post a Comment