Friday, 12 June 2015

கண் கண்ட கல்லூரி

                                                      கண் கண்ட கல்லூரி  

     கல்லூரி ஒரு ‘கோயில்’. அதில் பேராசிரியர்கள் ‘தெய்வங்கள்’ ஆகிறார்கள்; மாணவமணிகள் ‘பக்தர்கள்’ ஆகிறார்கள். அவர்கள் படிக்கும் பாடபுத்தகங்கள் அவர்களுக்குப் ‘பிரசாதம்’ ஆகின்றது. 

     பேராசிரியரைத் தெய்வமாக மதிப்பவன் ‘பேரறிஞன்’ ஆகிறான். பாடபுத்தகத்தைப் பிரசாதமாக நினைப்பவன் ‘பட்டம்’ என்னும் நாலெழுத்துக்கு அதிபதியாகிறான்.

     கடவுளை நம்பாதவன் ‘நாஸ்திகன்’ ஆவதுபோல், பேராசிரியரை மதிக்காதவன் ‘பேதை’ ஆகிறான்.  கோயிலில் செல்வதால் ‘பக்தி’ பெருகுகிறது.  கல்லூரியில் பயில்வதால் ‘பண்பு’ வளர்கிறது.

     ஆகவே, அன்பிற்கினிய மாணவ, மாணவிகளே, நாம் கல்லூரியை ‘கோயிலாக’ நினைத்து, பேராசிரியர்களைத் ‘தெய்வமாக’ மதித்துப் பாடபுத்தகத்தைப் ‘பிரசாதமாக’ பாவித்து நல்முறையில் நடப்போமென்றால், நம் வாழ்க்கையில் எவ்வித வழுக்குதலும் இன்றி முன்னேறுவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

     [இக்கட்டுரை, நான் மார்த்தாண்டம், நேசமணி நினைவுக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டுஇளங்கலைப் பயின்று கொண்டிருந்த போது முதல் முதலில் எழுதியது. இது அக்கல்லூரியின் 1987 – 1988 ஆம் ஆண்டுமலரில் பிரசுரமானது.] 
    
  



   

No comments:

Post a Comment