Sunday, 28 December 2014

சுந்தரபாண்டியன் புனைபுகள்

சுந்தரபாண்டியன் புனைபுகள்

                                  முனைவர் சு.மகேஷ்குமார்
    

         மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகத் திகழ்பவர் அருமைச் சகோதரர் முனைவர் சு. மகேஷ்குமார் அவர்கள்.  பேச்சு, பாட்டு, எழுத்து, ஆய்வு ஆகியவற்றில் இவர் கைதேர்ந்த கலைஞர்.

     இவர் முகத்தில் எப்பொழுதும் புன்னகைத் ததும்பும். நயமான பேச்சால் அனைவரையும் தன்வசமாக்கும் வல்லமை படைத்தவர். கடின உழைப்பிற்கு இவர் முன்னுதாரணமானவர். பேராசிரியர் பணியில் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு, அப்பணியை முழு மூச்சாய்ச் செய்துவருபர்.

     கவிதை, கட்டுரை என இருவேறு படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் செய்துவிட்டுத் தற்போது ஆய்வு நூலுக்குள் அடியெடுத்துவைத்துச், “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் மிக அற்புதமான ஆய்வு நூலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    யார் இந்தச் சுந்தரபாண்டியன் இலக்கியப் படைப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர். நூல் பதிப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதைப் பதிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டிப் பதிப்பகத் திலகமாகத் திகழ்பவர். படைப்பு, பதிப்பு இவை இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டவர். கல்லூரியில் பேராசிரியர் பணியைப் பெருமைமிகு பணியாகச் செய்துகாட்டியவர். நாட்டுப்புற இலக்கிய ஆய்வில் தன்னை முழுமையாகச் சமர்ப்பணம் செய்தவர். அதுபோலவே நாட்டுப்புற இலக்கியப் படைப்பிலும் பதிப்பிலும் தமக்கு நிகர் இத்தரணியில் எவரும் இலர் என நிருபித்தவர்.

     இவை அனைத்திற்கும் மேலாக “காவ்யா” என்னும் பதிப்பகத்தின் காவியத் தலைவனாகத் திகழ்ந்து எண்ணிலா அரும்பெரும் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களைத் தமிழ்த் தாய்க்குப் படையலாகப் பதித்தளித்தவர். இத்தகு பன்முகத்திறன் கொண்டவர்தான் இந்தச் சுந்தரபாண்டியன்.

     “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
     தோன்றலிற் தோன்றாமை நன்று.” என்னும் வள்ளுவத்திற்கிணங்கப் பிறவியின் பயனை இவ்வையகத்தில் புலப்படுத்தி நிற்கும் சுந்தரப்பாண்டியனாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தமிழ் இலக்கியத் தளத்தில் தடம் பதித்த படைப்புகள் பற்றியும் இவ்வாய்வு நூல் தெள்ளத் தெளிவாக ஆய்ந்துள்ளது.

     தொடர்ந்துவரும் இளம் ஆய்வளர்கள் இது போன்று ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றியோ, அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியோ ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இவ்வாய்வு நூல் ஒரு வழிகாட்டி நூலாகவே அமையும் என்பது திண்ணம். நூலாசிரியர் முனைவர் சு. மகேஷ்குமர் இதுபோல் ஏராளம்… தாராளம்…ஆய்வு நூல்களை ஆய்ந்தளித்துத் தமிழ் இலக்கியத் தடாகத்தில் மகத்துவம் பெற வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…

(சு. மகேஷ் குமார் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு, கிரேஸ் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார். இவரது “சுந்தரபாண்டியன் புனைவுகள்” என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய வாழ்த்துரை இது.)




       

Friday, 5 December 2014

நியாயமா? இது நியாயமா?

                                               நியாயமா? இது நியாயமா?

     எனது நியாயமா? இது நியாயமா? என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் எழுதிய முன்னுரை.

வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு

     அருமைச் சகோதரர் முனைவர் கமல.செல்வராஜ் அவர்களுடன் எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு அதிகமான நெருங்கிய பழக்கம். சொந்தச் சகோதரர் போல அவ்வளவு பிரியமாக இருப்பார். சமூக அக்கறையுள்ள நல்ல கவிஞர்; கதையாளர். தம் கருத்துகளை வலியுறுத்தி விவாதம் செய்யும் வீறுமிக்க பேச்சாளர். மனத்தில் பட்டதை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகப் வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு. அவருடைய தொலைக்காட்சி விவாதங்கள் இரசிகர்களைச் சுட்டி இழுத்ததை நான் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்.

     சில ஆண்டுகளாக திரு. பி. எஸ். இராஜ் அவர்கள் தொண்டுணர்வோடு வெளியிட்டுவந்த சமூக அக்கறையுள்ள மாத இதழான சமுதாய நண்பனில் கமல் அவர்கள் தொடர்ந்து எழுதிய பல்வேறு சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கட்டுரைகள் இந்தத் தொகுப்பாக வெளிவருகின்றது. கல்வியின் நோக்கம், அதன் செயல்முறை, ஆசிரியர்கள், சமூகப் பண்பாடு, முதலிய பொருள்களில் அவர் எழுதிய சொல்லழகும் மொழியழகும் கொண்ட கட்டுரைகள் இவை.

     இக்கட்டுரையின் பொருள்களோடு வாசகர்கள் ஒன்றிப் போகவும் முரண்படவும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர் மனத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தும்  பதில் சொல்லத் தூண்டும். ஆசிரியரின் முதன்மையான நோக்கம் இது என்றே தோன்றுகிறது.

     முயன்று முனைவர் பட்டம் பெற்று, இன்று, ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகச் சிறப்புடன் பணியாற்றும் டாக்டர் கமல.செல்வராஜ் அவர்கள் தம் படைப்புகளைத் தொடர்ந்து சமூகத்திற்குத் தர வேண்டும் என மன நிறைவோடு வாழ்த்துகிறேன்.

     இந்நூல் சென்னையிலுள்ள பிரபல பதிப்பகமான  காவ்யா பதிப்பகத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விலை இருநூறு { ரூ.200 } நூல் கிடைக்கும் இடங்கள்

                  காவ்யா
                  16, இரண்டாம் குறுக்குத் தெரு,
                   டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்
                   சென்னை. போன்: 044-23726882.

கன்னியாகுமரி மாவட்டம்:    
                           1.ஸ்டார்புக்சென்டர்,                                                  நாகர்கோவில் (04652 233107)                                                      
                           2. சுதர்சன் புக் சென்டர்
                              நாகர்கோவில்(93675 10985)  
                         
                           3. முதற் சங்கு புக் சென்டர்
                               தக்கலை. (9442008269)                         
                          

                           4. பாபு ஸ்டோர், மார்த்தாண்டம். 
                              (9150311711)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
            

Thursday, 3 July 2014

THE DUTY OF PARENTS

                                             THE DUTY OF PARENTS

     Children are the most precious gift of the Lord to the world.  All love children and like them very much.  Parents should take much care to children’s developments.  I would like to say a few worlds about the duties of parents here.

Character

     At the time of birth, children have no idea and thinking capacity.  Everything they learn from their parents.  So, the parents should treat the children very carefully.

     The first duty of parents is to build good characters to their children.  During childhood we can teach anything to children in an easy way.

     Truthfulness, kindness, obedience and respect to elders etc are very good characters.  The parents should teach these types of characters to children through their activities and moral stories.  These characters create very good citizens in our society and country.  Character is the hall mark of a man.

                        “If the wealth is lost nothing is lost
                          If the health is lost something is lost
                          If the character is lost everything is lost”

     Character building should be done with careful and sustained nurturing of right thought and conduct.  Children spent more time at home than in school.  Parents are the first teachers of the children.  They should try to spent more time with their children for overall development, children should be treated with love, affection and care.  But don’t curdle them, because only the test of fir makes fine steel.

     Parents should try to be model to their children.  They must be punctual, gentle, simple, unassuming, honest, upright bold, active, patriotic and spiritual who could inspire such qualities to their children.

Education

        The second duty is to educate the children in proper way.  Education makes a full man. At first select a good school for education.  Then get guidance from the best and model teachers.  The good school and model teachers will make your children all-rounders.  Parents should try to create a serene atmosphere at home that is fit for learning.  It is the duty of parents to teach their children the common etiquette.  All children are born innocent but they are made guilty or offensive by others such as elders, teachers, parents etc.

        From the primary education to the higher education your personal care is essential for the development of your children.

Guidance:
        After completion of the education parents should guide children to be good citizens. Necessary help and advice should be given to them for obtaining a good job and lead a peaceful happy family life. 

        This article was published in N.M.VIDYA KENDRA School magazine in 2012.
      





  
 
                              




Monday, 23 June 2014

நகையோடு வேண்டுமா நட்புறவு ?


             நகையோடு வேண்டுமா நட்புறவு ?

     பெண்களுக்குத் தேவை நகை.  இது புன்னகையா? பொன்னகையா? என்பது ஒரு கேள்வி.  இவற்றில் முன்னது முந்தி நின்றால், அது அவர்களுக்கு அழகைத் தரும்.  பின்னயது முந்தி நின்றால் அழிவைத் தரும்.
     முன்பெல்லாம் பொன்னகையானது பெண்களுக்கு ஓர் அடையாளப் பொருளாகவே இருந்து வந்தது.  அது அவர்களுக்கு அவசியமானதாகவும் அழகாகவும் இருந்தது. கூடவே அளவாகவும் இருந்தது.
     ஆனால், இன்று இது, பெண்களின் ஆடம்பரப் பொருளாகவும் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது. கூடவே ஆபத்துக்கும் வழிவகுத்து விட்டது.
     அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி. இப்பழமொழி இன்று நகை விஷயத்தில் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஏனென்றால், அளவுக்கு அதிகமாக அவர்கள் நகை அணிவதால் அதுவே, அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தருணத்தை ஏற்படுத்துகின்றது.
     பெண்கள்  அன்று நூலளவில் தாலியை அணிந்திருந்தார்கள். அது, அவர்களுக்குத் திருமணம் ஆனவர்கள் என்பதற்கு அடையாளமானது.
     பிற்காலத்தில் அது, கயிறளவாகி, தற்போது பத்து பவுன், இருபது பவுன் என எடை அதிகரித்து வடம் போலாகி அதுவே அவர்களுக்குக் கொலைக் கயிறாகி விட்டது.
     நகை மீது பெண்களும் மக்களும் ஏன் இவ்வளவு மோகம் கொள்கின்றனர் என்பது சற்றே சிந்தனைக்குரியது. இந்த மோகமானது, இன்று நாட்டில் பல்வேறு குழப்பங்களுக்கும் திருப்பங்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
     திருமணம் என்றாலே, இன்று கிலோ கணக்கில் நகை அல்லது தங்கம் வேண்டுமென்ற மனநிலை மக்களிடையே உருவாகியுள்ளது. சாதாரண குடும்பங்களில் நடக்கும் திருமணத்திற்கும் ஐம்பது பவுன் நகை, நூறு பவுன் நகை என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
     இதன் விளைவு, நகையின் விலை வானளாவி நிற்கின்றது. தங்கம் பொரும்பான்மையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருளாகும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்குத் தங்கத்தின் விலையேற்றமும் ஒரு முக்கியக் காரணியாகும்.
     இவ்வளவு விலை உயர்ந்த பொருளை நூறு பவுன் அல்லது ஒரு கிலோ, இரண்டு கிலோ என திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் அதனை அப்படியேக் கொண்டு ஏதேனும் ஒரு வங்கி லாக்கரில் வைத்து விடுகின்றனர். பல லட்சம் பணம் செலவழித்து வாங்கியப் பெருளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பதற்குப் பல ஆயிரங்களைக் கொடுக்கின்றனர்.
    இப்படி பலரும் செய்வதின் மூலம் நாட்டில் பணத்தேக்கம் ஏற்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்றது. இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
     ஒருபுறம் இது இப்படியிருக்க, மறுபுறம் பொன்னோ, பொருளோ இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொடுக்க முடியாமல் எத்தனையோ குடும்பங்களில் எண்ணிலடங்காப் பெண்மணிகள் நாற்பது வயது ஐம்பது வயதாகியப் பிறகும் திருமணம் என்பது கானல் நீராகி, முதிர் கன்னிகளாகவே காலத்தைக் கழிக்கின்றனர். இப்படிப்பட்ட பரிதாப நிலைக்கும் இந்த நகைதான் காரணியாகின்றது.
     இப்போதெல்லாம் நாட்டில் கொலையும் கொள்ளையும் சர்வசாதாரணமாகி விட்டன. தினமும் காலையில்  தினசரிகளைப் புரட்டிப் பார்த்தால் நம் இதயத்துடிப்பே நின்று போகும் அளவுக்கு கொடூரக் கொலைகளையும் அதிர வைக்கும் கொள்ளைச் சம்பவங்களையும் தாங்கியே வருகின்றன.
     தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்துப் பார்த்தால் பட்டப்பகலிலும் பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை. மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணின் கழுத்தில் கிடந்த இருபது பவுன் தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
     பூட்டிய வீட்டை உடைத்துப் பீரோவில் இருந்த நூறு பவன் நகை கொள்ளை, அதிகாரியின் மனைவியை கட்டி வைத்து வீட்டிலிருந்த ஒரு கிலோ, இரண்டு கிலோ தங்கம் அபேஸ்.
     இப்படிப்பட்ட செய்திகளெல்லாம் பஞ்சமில்லாமல் தினமும் பத்திரிகைகளுக்கும் தொலைகாட்சிகளுக்கும் தீனி போட்டு கொண்டே இருக்கின்றன.
     தான் செத்து மீன் பிடிப்பதால் என்ன பயன் என்ற பழமொழியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் உழைத்து களைத்து சம்பாதித்ததை எல்லாம் இப்படி பொன்னாக்கி காதிலும் கழுத்திலும் அணிந்தும் வீட்டு பீரோவில் அடுக்கியும் வைப்பதினால்தானே உங்கள் விலைமதிப்பற்ற உயிருக்குக்கூட உலை வைக்கின்றனர்.   

     நீங்கள் நகையின் மீது மோகம் கொண்டு உயிரையே காவு கொள்ளக் கொடுப்பதினால் என்ன பயன் என்று எண்ணிப் பார்க்காதது ஏனோ?
     நகை மீதுள்ள மக்களின் மோகம் தங்களுக்கு இலாபகரமானது என அறிந்துள்ள நகைக்கடை முதலைகளும் மக்களை கவருவதற்காக என்னென்ன விளம்பர உத்திகளை கையாள முடியுமோ அத்தனை உத்திகளையும் மிக அற்புதமாக கையாண்டு வருகின்றனர்.
     நகைக் கடைகளில் விளம்பர உத்தி என்பது மீன்களை பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலைப் போன்றது. தூண்டிலில் மாட்டிய மீனின் வாழ்க்கை எப்படி மாயமாகிறதோ அதைப் போன்றுதான் நகையின் மீது மோகம் கொள்ளும் மனிதற்களின் வாழ்க்கையும் விலையற்றுப் போகின்றது.
     நீங்கள் காதிலும் கழுத்திலும் நகையை அலங்கரித்துக் கொண்டு வழியில் பயந்து பயந்து நடப்பதை விடவும் வீட்டுப் பிரோவில் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளை அடிக்கி அடிக்கி வைத்து விட்டு தூக்கவும் நிம்மதியுமின்றி தவிப்பதை விடவும் இவற்றிக்காகச் செலவழிக்கும் பணத்தை மாற்று வழியில் பயன்படுத்தி பலருக்கும் பயன்படச் செய்ய ஏதேனும் வழியுண்டா என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்ட?
     இல்லை… இல்லவே இல்லை… என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  அப்படி எண்ணியிருந்தால் எத்தனை எத்தனையோ வழிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  அந்த வழிகளில் நீங்கள் பயணித்து பலருக்கும் பயன்படக்கூடிய வகையில் உங்கள் வருமானத்தைப் பயன்படுத்தி அமைதியான, நிம்மதியான, பாதுகாப்பான ஒரு வாழ்க்கைப் பாதையில் நீங்கள் பயணித்திருக்கலாம்.
     நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
     அதனால், நகைக்காகவும் தங்கத்திற்காகவும் நாம் செலவளிக்கும் பணத்தைக் கொண்டு ஏதேனும் சிறு, பெரும் தொழில் தொடங்கலாம். அதன் பேரில் எத்தனையோ பேர் வேலை வாய்ப்பு பெற்று எத்தனையோ குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதன் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கும் நல்ல வருமானம் வரும்; கூடவே நிம்மதியான வாழ்வும் கிடைக்கும்.
     தொழில் செய்யாததற்கு விரும்பாதோர் குறைந்த பட்சம் தங்கள் கையிருப்பாக உள்ள நகைகளையும் கிலோ கணக்கான தங்கத்தையும் விற்றுப் பணமாக்கி அதை ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெப்பாசிட் செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு வங்கி மூலம் நல்ல வட்டியும் கிடைக்கும்; எவ்வகையிலும் பயமில்லாத மகிழ்ச்சியான. அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
     மட்டுமின்றி நம்மிடம் இருக்கும் நகையும் தங்கமும் பணமானால் நாட்டில் பணத்தேக்கம் ஏற்படாமல் பணப்புழக்கம் ஏற்படுவதற்கு வழிவகைச் செய்யலாம். இதனால் விலைவாசிக் குறையும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை ஏற்படும்.
     தொழில் துறையில் மூதலீடு செய்வதற்கோ, வங்கியில் சேமிக்கவோ விரும்பதாவர்கள், விவசாயத்தில் நாட்டம் இருந்தால் விவசாயத்தில்கூட முதலடு செய்யலாம்.
     இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதும் அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் அமையும்.
     எனவே, பெண்களாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் பொன்னின் மீது கொண்டுள்ள அதீதமான பற்றையும் பிடிவாதத்தையும் விட்டுவிட்டு அவற்றின் பயன்பாட்டை மிகவும் குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
     அதிலும் குறிப்பாக பெண்கள் நகைகளை அணிவது வெறும் அடையாளத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் இருக்க  வேண்டுமே தவிர அது ஆடம்பரத்திற்காகவோ, அலங்காரத்திற்காகவோ உரியதாக மாறிவிட கூடாது. அப்படியானால் அது அவர்களுக்கு இன்றைய காலச்சூழலில் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகவே அமைந்து விடும்.
     நகை மீதுள்ள மோகத்தைக் குறைத்து நமது உயிரையும் பிற உடைமைகளையும் பாதுகாக்க முயற்சிப்போம். அதோடு நாட்டு நலத்தின் மீது அக்கறைக் கொண்டு பணப்புழக்கத்தை ஏற்படுத்தி வீ லைவாசி
ஏற்றத்தைத் தடுத்து ஏழை, எளிய மக்கள் வாழ்வதற்கு வழிவகுத்து ஏற்றமிகு இந்தியாவை உருவாக்குவோம்.
                              
                  இக்கட்டுரை ஃபெட்காட் செய்திகள் காலாண்டிதழில் ஜனவரி – மார்ச் : 2014 இதழில் பிரசுரமானது.


Monday, 10 March 2014

குற்றாலதாசன் கவிதைகள்


                 குற்றாலதாசன் கவிதைகள்

        இதய நண்பர் இனிய நூல் வாழ்க! 

   இது ஓர் இதிகாசத் தோழமை!
 

எத்தனை ஜென்மம்

தவம் செய்தேன்

இப்படியோர் தோழமைக்கு!

 

கேரளத் தலைநகர்

தமிழ்ச் சங்கத்தில்

கவித்துவம் ததும்பிய

சொற்பொழிவில்

சொக்கி நின்றேன் மூச்சற்று!

 

வானொலி நிகழ்ச்சியால்

வானுயர்ந்து நிற்பவர்!

தொலைக்காட்சித் தொகுப்பால்

உலகறிந்து ஒளிர்பவர்!

களங்கமில்லாச் சிரிப்பால்

நீசரையும்

நேசராக்கும் வல்லவர்!

 

பேச்சிலும் மூச்சிலும்

எழுத்திலும்

கவித்துவம்

கரைபுரண்டொழுகுவதால்

 

நவரச நாவலர்

நீல பத்மம்

பத்ம கவி

கவிமாமணி

அருந்தமிழ்த் தொண்டன்

என எத்தனையோ

விருதுகளை

விழுதுகளாக்கியவர்!

 

முண்டாசுக் கவிஞனுக்குக்

கண்ணன்போல

என்

குருவாய்

தோழனாய்

அன்பிற்கினிய

அண்ணலாய்

மாசு கண்ணுறுமிடத்துக்

கடிந்துரைக்கும் காரணவராய்

இன்னும். . .

 

அவர்தாம்

மாசற்ற மாமனிதர்

குற்றாலம் ஐயாவின்

தாசன்

குற்றாலதாசன்!

 

குகனொடு

இராமன் கொண்ட

தோழமை போல்

எளியேன் மேல்

பாசமுற்று

பரிவுற்று

ஏற்படுத்திய தோழமை!

இது ஓர்

இதிகாசத் தோழமை!

 

உதட்டோரம் சொல்வதன்று!

உணர்ச்சி வயப்பட்டு

எழுதுவதுமன்று!

ஊனோடும் உயிரோடும்

உறவாடும் தோழமை!

இது

ஊரார் உலகார்

அறிந்த தோழமை!

ஊனுயிர் உள்ளளவும்

நீடித்து நிற்கும்

தோழமை!

 

குற்றாலதாசன்

கவிதை நூலுக்குத்

தோழமையுரையாய்

எழுதுகிறேன்

உத்தமர்

இவர்தம்

கவிதையெல்லாம்

முக்கனிச் சாறாய்

இனிப்பதினால். . .

 

பள்ளிப் பிள்ளைகள்

படித்திடவும்

பல்கலை மாணவர்

ஆய்ந்திடவும்

விருதுகள்

பற்பல பெற்றிடவும்

பண்டிதர் பலரும்

பரிந்துரைப்பார்!

 

பித்தன் அடியேன்

பிதற்றுகின்றேன்

சத்தியமிது

சாத்தியமே!

              கவிஞர் கே.என். பெருமாள் எழுதிய குற்றாலதாசன்  கவிதைகள் என்னும் கவிதை நூலுக்காக எழுதிய வாழ்த்துரை.  

               

நூல் குறிப்பு:

                  குற்றாலதாசன் கவிதைகள் என்னும் இந்நூலின் ஆசிரியர் பத்மகவி கே.என். பெருமாள் ஆவார்.

நூலின் விலை:ரூ.250/-

நூல் கிடைக்குமிடம்: கிருஷ்ணமணி நிலையம்

                         வர்த்தகநாடார் குடியிருப்பு,

                         கட்டிமாங்கோடு அஞ்சல் 629 806,

                         கன்னியாகுமரி மாவட்டம்.

                         செல் 9445209368,  9445878741

                         Gmail kn.perumal yahoo.in

                

 

Friday, 31 January 2014

யார் இவர்… ?


                       யார் இவர்… ?

 

      பேச்சை மூச்சாகவும்

      எழுத்தை வாழ்க்கையாகவும்

      அழிவில்லா ஆன்மீகத்தை

      அகிலமெல்லாம் பரப்ப

      ஆர்வம் கொண்டவரும்தான்

      அன்புச் சகோதரர்

      வின்சென்ட் அல்போன்ஸ் அவர்கள்…!

 

      இவர் குமரியின் முத்து

      அருமனையின் சொத்து

      இவர் சார்ந்தது கிறிஸ்தவம்

      உணர்ந்தது சர்வமதம்…!

  

      கவலை முதலாய்

      எகிப்தில் இஸ்ரவேலர் ஈறாய்

      முத்தாய் மூவிரு புத்தகம்

      எழுதி வெளியிட்டுள்ளார்…!

 

      மறைநூற்கள் கூறும்

      மதுவின் கொடுமையை

      தொகுத்து நமக்கு

      அனுபவத்தோடு ஆய்ந்து

      அருமருந்தாய் தந்துள்ளார்…!

 

      மதுவும் மாயையுமென

      இவர் ஆராய்ந்தறிந்த

      அறிவுரையை சிரமேற் கொள்வோம்…!

 

      மானுடம் அழிக்கும்

      மதுவை ஒழித்திட கரம் கோர்ப்போம்

      தொடர்ந்து இவர் எழுதிட

      இணைந்தே உதவிடுவோம்…!

 

நூல் குறிப்பு:

 

     மதுவும் மாயையும் என்னும் கட்டுரை நூலை ஆக்கியோன் சி. வின்சென்ட் என்ற அல்போன்ஸ் ஆவார். கட்டடச் சிற்பியான இவர் இதற்கு முன்பு ஐந்து புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது ஆறாவது புத்தகமாக மதுவும் மாயையும் என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தின் பின் அட்டையில் ஆக்கியோனை அறிமுகம் செய்து எழுதப்பட்டதுதான் யார் இவர்…?என்னும்இக்கவிதை.

    
                              இந்நூலின் விலை ரூ.100.  நூல் கிடைக்குமிடம்:

சி. வின்சென்ட், ஒற்றால்விளை, மாத்தூர்கோணம், வெள்ளாங்கோடு, சிதறால் – 629 151, அருமனை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.