Friday, 5 December 2014

நியாயமா? இது நியாயமா?

                                               நியாயமா? இது நியாயமா?

     எனது நியாயமா? இது நியாயமா? என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் எழுதிய முன்னுரை.

வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு

     அருமைச் சகோதரர் முனைவர் கமல.செல்வராஜ் அவர்களுடன் எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு அதிகமான நெருங்கிய பழக்கம். சொந்தச் சகோதரர் போல அவ்வளவு பிரியமாக இருப்பார். சமூக அக்கறையுள்ள நல்ல கவிஞர்; கதையாளர். தம் கருத்துகளை வலியுறுத்தி விவாதம் செய்யும் வீறுமிக்க பேச்சாளர். மனத்தில் பட்டதை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகப் வெடிப்புறப் பேசும் பாரதி வாரிசு. அவருடைய தொலைக்காட்சி விவாதங்கள் இரசிகர்களைச் சுட்டி இழுத்ததை நான் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்.

     சில ஆண்டுகளாக திரு. பி. எஸ். இராஜ் அவர்கள் தொண்டுணர்வோடு வெளியிட்டுவந்த சமூக அக்கறையுள்ள மாத இதழான சமுதாய நண்பனில் கமல் அவர்கள் தொடர்ந்து எழுதிய பல்வேறு சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கட்டுரைகள் இந்தத் தொகுப்பாக வெளிவருகின்றது. கல்வியின் நோக்கம், அதன் செயல்முறை, ஆசிரியர்கள், சமூகப் பண்பாடு, முதலிய பொருள்களில் அவர் எழுதிய சொல்லழகும் மொழியழகும் கொண்ட கட்டுரைகள் இவை.

     இக்கட்டுரையின் பொருள்களோடு வாசகர்கள் ஒன்றிப் போகவும் முரண்படவும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர் மனத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தும்  பதில் சொல்லத் தூண்டும். ஆசிரியரின் முதன்மையான நோக்கம் இது என்றே தோன்றுகிறது.

     முயன்று முனைவர் பட்டம் பெற்று, இன்று, ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகச் சிறப்புடன் பணியாற்றும் டாக்டர் கமல.செல்வராஜ் அவர்கள் தம் படைப்புகளைத் தொடர்ந்து சமூகத்திற்குத் தர வேண்டும் என மன நிறைவோடு வாழ்த்துகிறேன்.

     இந்நூல் சென்னையிலுள்ள பிரபல பதிப்பகமான  காவ்யா பதிப்பகத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விலை இருநூறு { ரூ.200 } நூல் கிடைக்கும் இடங்கள்

                  காவ்யா
                  16, இரண்டாம் குறுக்குத் தெரு,
                   டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்
                   சென்னை. போன்: 044-23726882.

கன்னியாகுமரி மாவட்டம்:    
                           1.ஸ்டார்புக்சென்டர்,                                                  நாகர்கோவில் (04652 233107)                                                      
                           2. சுதர்சன் புக் சென்டர்
                              நாகர்கோவில்(93675 10985)  
                         
                           3. முதற் சங்கு புக் சென்டர்
                               தக்கலை. (9442008269)                         
                          

                           4. பாபு ஸ்டோர், மார்த்தாண்டம். 
                              (9150311711)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
            

No comments:

Post a Comment