Monday, 23 December 2024

https://youtu.be/TYAvM7LrjsU?si=xKtJGAwDqkVlJ1ii

Release of 'Silhouettes'. 

நிழல் என்னும் நூல் வெளியீட்டு விழாவினுடைய இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை தரும்படி வேண்டுகிறேன் இந்த வீடியோவை முழுமையாக பார்ப்பதற்கு இங்கே  கிளிக் செய்யவும். 

இந்த நூலை  இணைய வழியில் பெற்று கொள்வதற்கான லிங்கும் (Link) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது வாங்க விரும்புவோர் இணைய வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Purchase “SILHOUETTES” online through:

Amazon:
https://amzn.in/d/3AKAw4w

Flipkart:
https://dl.flipkart.com/dl/silhouettes/p/itm8804f1b8c0654?pid=9789358194890&cmpid=product.share.pp&_refId=PP.6c09cdc2-df68-4aaa-92bb-4870cdb00935.9789358194890&_appId=CL

Official website of Blue Rose Publishers:
https://blueroseone.com/store/product/silhouettes

Tuesday, 8 October 2024

Radio Interview

Radio Interview

வீரத்தின் விளை நிலம் அஹல்யாபாய்.

 வீரத்தின் விளை நிலம் அஹல்யாபாய்.

முனைவர் கமல. செல்வராஜ்.
அழைக்க: 9443559841
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முப்பது ஆண்டுகள் மகாராணியாக, மாவீரத்துடன் மல்வாவை ஆட்சி புரிந்த வீரத்தின் விளை நிலம் அஹல்யாபாய் பற்றிய இப்புத்தகம் ஓர் அற்புதம்.
ஒரு நீண்ட நெடிய வரலாற்றை, படிப்போருக்குப் பரவசமூட்டும், கரும்புச்சாறாக்கித் தந்திருக்கும் இந்நூலாசிரியர் முனைவர் பெ. சாந்தி அவர்களின் படைப்பாற்றல் பாராட்டுக்குரியது.
அக்கால மரபில், பக்குவமாகாப் பருவத்தில் மணம் முடித்து, இரு மழலைகளின் தாயாகி, வாழ்க்கை நிறைவுறும் முன்பே கைமையானவள் அஹல்யாபாய். இளமையில் விதவையானால் கொண்டவனின் சிதையிலேறி உயிர் நீர்ப்பதுவே அக்கால முறை.
ஆனால், தன்னுள்ளிருந்த அறிவாற்றலையும் வீரதீரத்தையும், கொண்டவன் உறவுகள் உணர்தமையால், அவளை சிதையேறுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, அரியணையேற வைத்தனர். இது அக்காலத்தில் அஹல்யாவிற்கு மட்டுமே கிடைத்தப் பெரும்பேறு.
மகாராணியானாலும், அமச்சர்களின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டு, அரண்மனைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், தன் நாட்டை எதிர்த்து வந்தோரிடம், நேருக்குநேர் நின்று போரிட்டு வெற்றி வாகைச் சூடியப் பெருமை அவளின் வீரத்தின் மகிமை. நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும், உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்கும் பொறுமையே, அவள் ஆட்சியின் பெருமை.
இப்படி வீரமும், விவேகமும், தியாகமும் நிறைந்த மகத்தான மகாராணியின் வரலாற்றை, பொருத்தமான அழகியப் புகைப்படங்களுடன், எளிமையும் இனிமையும் ததும்பப் படிப்போர் இதயத்திற்கு இதமாக்கித் தந்துள்ள முனைவர் பெ. சாந்தியின் படைப்பாற்றல் அபாரமானது.
கல்வித்துறையில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றிருக்கும் இவர், அத்துறை சார்ந்த அனுபவங்களையும், எண்ணங்களையும் எண்ணிலா நூல்களாக்கி, படைப்புத் துறையில் கலங்கரை விளக்காய்த் திகழ்வார் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
21-09-2024.
(இது வீர மங்கை இராணி அஹல்யாபாய் என்னும் நூலின் அணிந்துரை.)
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9500128304

Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebo

Friday, 20 September 2024

பொக்கிஷத் தேடல்.

                                      பொக்கிஷத் தேடல்.

இஃது ஓர் அறிவுக் கலவை.
ஒரு படைப்பாளியாவதற்குப் படிப்பு, பட்டம், பதவி இவை எதுவும் தேவையில்லை; ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர் இந்நூலாசிரியர் செ. வின்சென்ட் அவர்கள்.
அது போலவே, ஒரு நூலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற நெறிமுறையின்றி, எப்படியும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்கும் இவரே முன்மாதிரியாவார்.
பொக்கிஷத் தேடல் என்பது இவரின் பதிமூன்றாவது நூல். இவற்றில் முதல் இரண்டு மூன்று நுல்களைத் தவிரப் பிற அனைத்து நூல்களுக்கும் அடியேன் அணிந்துரை ஆக்கியுள்ளேன்.
அவற்றில் ஒரு நூலுக்குக் கூட, ‘நீங்கள் இதைதான் எழுத வேண்டும்; இப்படித்தான் எழுத வேண்டும்’ என அவருக்குக் கட்டளையிட்டதோ, கட்டுப்படுத்தியோ இல்லை.
ஏனென்றால், அவருக்குள், எழுத வேண்டும் என்ற உந்துசக்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குள் பிறரின் மேதாவித்தனம் புகுந்து விட்டால், அந்த ஆதிக்கத்தின் உத்வேகம் குறைந்து, அவரின் முயற்சி முற்று பெற்றிடும்.
அதனால், அவர் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என முனைகிறாரோ, அதை அப்படியே எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவதையே கரிசனமாகச் செய்துள்ளேன். அதனால், அவர் இத்தனை நூல்களை எழுதி, இன்று தமிழக அரசிடமிருந்து தமிழறிஞர்களுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்று எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.
அதனடிப்படையில் பொக்கிஷத் தேடல் என்னும் இந்நூலுக்குள் என்ன பொக்கிஷம் இருக்கிறது? எனத் தேடாதீர்கள். அன்னாரின் வாழ்நாளின் அனுபவத்தில் கண்டது, கேட்டது, பார்த்தது, படித்தது, அனுபவித்தது என அனைத்தையும் அவியல், பொரியல், துவயலாக்கித் தந்துள்ளார். அவற்றில் எவை வாசகர்களாகிய உங்களுக்குப் புதுமையாகப் புலப்படுகிறதோ, அதைப் பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இவர் திருவிவிலியக் கருத்துக்கள் மீது தீராக் காதல் கொண்டவர். அக்கருத்துக்களை மேன்மைப்படுத்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம். அவற்றினூடே வள்ளலாரையும் பட்டணத்தாரையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கூடவே சபரிமலை ஐயப்பனின் சொரூபத்தையும் கடைசியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் மங்கள வீடுகளின் அடையாளமாகத் திகழ்ந்திருந்த சளை மரமும், மாடு கட்டி தேங்காய் அரைப்பதற்குப் பயன்படுத்திய அரவைச் செக்கும், இன்று அடையாளமின்றி அழிந்துபோயின. அவற்றை அறியாத, காணாத இன்றைய இளம் தலைமுறையினர் இந்நூலைப் படித்தால், அவர்களுக்கு, அவை புதையலாகவே புலப்படலாம். அதுபோலவே, வியாபாரத் தரகர்கள் தங்களுக்குள் பயன்படுத்தி வந்த, பிறருக்குப் புரியாத இரகசிய எண்களும் புதையலாகலாம்.
மேலும் நவீன காலத்தில் பல்கிப் பெருகி வரும் போதைப் பழக்கமும், அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகளும், படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் போலி பட்டங்களும், தினசரிகளில் தினம் தோறும் வெளியாகும் கொலை, கொள்ளை, பலாத்காரங்களும் இந்நூலின் கருப்பொருள்களாகி, மொத்தத்தில் இந்நூல் ஓர் அறிவுக் கலவையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இவ்வறிவுக் கலவைக்கு வாசகர்கள் பேராதரவு நல்கினால், இந்நூலாசிரியரின் அறிவுத் தேடல் இன்னும் தொடர்ந்து,.. படர்ந்து… விரிந்து… மேலும் பலப் பொக்கிஷங்கள் புலரும் என்பது திண்ணம்.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்
அழைக்க: 9443559841
அணுக:drkamalaru@gmail.com
அருமனை.
19-08-2024.
(இஃது எழுத்தாளர் சி. வின்சென்ட் அவர்கள் எழுதிய பொக்கிஷத் தேடல் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய அணிந்துரை.)
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9751519114
May be an image of text
All re

Wednesday, 11 September 2024

பாலியல் கொடுமைகளை வேரறுக்க போதை ஒழிப்பு அவசியம்.

 

பாலியல் கொடுமைகளை வேரறுக்க போதை ஒழிப்பு அவசியம்.

     22 Aug 2024

  கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.

     நம் நாட்டின் வரலாற்றில், மன்னராட்சி காலத்திலிருந்து ஒரு நாட்டின் அழிவுக்கும், ஆட்சியின் முடிவுக்கும் முக்கிய காரணிகளாக விளங்குபவை மண்ணாசையும் பெண்ணாசையும் என்பதை புராணங்கள் தொடங்கி காப்பியங்கள் வரை தெளிவுப்படுத்துகின்றன.

அதன் நீட்சி தற்கால மக்களாட்சியிலும் தொடர்கதையாகயுள்ளது என்பதற்கு, சமீபக் காலமாக நம் நாட்டில் அரங்கேறி வரும் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் சாட்சியாகின்றன.

     பகுத்தறிவைப் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பச்சிளம் குழந்தைகளிலிருந்து, வேலைக்குச் செல்ல ரயிலில் பயணிக்கும் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாழ்படுவதும் பலியாவதும் மலிவாகியுள்ளன.

     தற்போது, இந்த எல்லைக் கோடுகளைத் தாண்டி, கொடும் நோயாலும் பெரும் விபத்தாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போரை, இறைவனுக்கு அடுத்தபடியாக, இரவு, பகல் பாராமல், சிகிச்சையளித்து பாதுகாக்கும் பணியில், தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மீதும் தொடங்கியுள்ளது.

     ஆரம்பக் காலங்களில் பாலியல் பலாத்காரங்களை வெளியேச் சொன்னால் அவமானம் எனக் கருதி, பாதிக்கப்படுபவர்கள் அதை வெளிக்கொணராமல் தங்களுக்குள்ளே மூடிமறைத்தனர். அது, இதுபோன்ற ஈனச் செயலைச் செய்த பாதகர்களுக்குச் சாதகமாக மாறியது. இப்பொழுதெல்லாம், மூடிமறைப்பதற்கு முன்புபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது போன்ற சம்பவங்களல்ல, நாடெங்கும் நித்திய சம்பவங்களாக மாறியுள்ளன.

     மணிப்பூரில் கடந்த ஓராண்டு காலமாக, இனக்கலவரம் என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேறி வரும் பாலியல் அத்துமீறல்கள்; மேற்குவங்கத்தில் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் கூட்டுப் பலாத்காரக் கொலை; மஹாராஷ்டிராவில் பள்ளிக் கழிவறையில் நான்கு வயது சிறுமியருக்கு ஏற்பட்டிருக்கும் தாங்க முடியாத பாலியல் கொடுமை; இப்படி பட்டியலிட்டால் இன்னும் பல பல...

     ஏன் இந்த இழிச்செயல்? யார் இதற்குப் பொறுப்பு? என்பதையெல்லாம் ஆய்ந்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு முழுமுதல் காரணமாக இருப்பது, நாடு முழுவதும் வெகு இலகுவாகக் கிடைக்கும் விதவிதமானப் போதைப் பொருள்கள். இவை வகுப்பறையிலிருந்தே  மாணவர்களை வழிமாற்றி விடுகிறது. இளைஞர்களை மாஃபியா கும்பல்களிடம் மண்டியிட வைக்கிறது. வழிபோக்கனையும் வழிபறி கொள்ளையனாக்குகிறது.

     அடுத்ததாக நம் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள். குற்றவாளிகளுக்குக் காலம் தாழ்ந்து கொடுக்கப்படும் இலகுவானத் தண்டனைகள். பாலியல் குற்றங்கள் உண்மையென கையும் களவுமாகப் நிரூபிக்கப்பட்டால், விசாரணை என்ற பெயரில் காலதாமதம் ஏற்படுத்தாமல் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் கடுமையான சட்டத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

     இவற்றிற்கு அப்பாற்பட்டு அரசியல் தலையீடு. இம்மாதிரி குற்றவாளிகள் தங்களின் அரசியல் அல்லது ஆட்சியாளர்களின் பின்புலத்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை உறுதி செய்யும் விதத்தில் தற்போது, மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கூட்டுப்பலாத்கார கொலை நடந்துள்ளது. இந்த வழக்கில் அம்மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் களத்தில் இறங்கி, மருத்துவர்கள் பாதுகாப்புக்காக வழிமுறைகளை உருவாக்க 10 பேர் அடங்கிய தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

     பள்ளிக் குழந்தைகளிடமும் பணிபுரியும் இடங்களில் பெண்களிடமும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஈனர்களை உடனடியாக அவர்கள் வகிக்கும் பணியிலிருந்து நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எவ்விதச் சலுகைகளும் வழங்கக் கூடாது.

     நாட்டில் நிலவும் போதை பொருள்களின் புழக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு நாட்டு மக்களின் கூட்டுப்போராட்டமும் விழிப்புணர்வும் பேரியக்கமாக மாற வேண்டும்.

(இக்கட்டுரை 22-08-2024 ietamil இணைய இதழில் பிரசுரமானது.)  

 

 

Thursday, 8 August 2024

மகத்துவம் நிறைந்த மானிடச் சிறகுகள்.

                    மகத்துவம் நிறைந்த மானிடச் சிறகுகள்.

முனைவர் கமல. செல்வராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வி மேம்பாட்டுக் கேந்திரம், தமிழ் நாடு.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
பார்க்க: drkamal voice (youtube)
(புலவர் கு. இரவீந்திரன் அவர்களின் மானிடச் சிறகுகள் நூல் உள்ளோட்டம்.)
பல்லாண்டுகாலம் பயிற்றுவித்தலில் பயணித்து, எண்ணிலா மாணவச் செல்வங்களை மாண்புறு மனிதர்களாக்கிய மகத்தும் நிறைந்தவர். செவிமடுப்போரின் இறுக்கமான இதயங்களை இளகவைக்கும் சுவைமிகு இலக்கியப் பேச்சாளர். ஆலயங்களில் ஆன்மீக உரையாற்றி, கேட்போரை பக்திபரவசத்திற்குள்ளாக்கி, இறைநிலைக்கு ஆற்றுப்படுத்தும் பேராற்றல் பெற்றவர்.
பயிற்றுவித்தல் நிறைவுற்ற பின்பு, எழுதுகோலை நெம்புகோலாக்கி, கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, வரலாறு, ஆன்மீகம், புதினம் என நூலாக்கம் செய்து, அண்மையில் பிரசுரித்த, பிரபலமான சங்கத் தமிழும் தமிழர் சமயமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்று, தமிழன்னையின் தவப்புதல்வனாகத் திகழ்பவர் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள்.
அன்னாரின் அரிய முயற்சியால், அளப்பரியச் சிந்தனையால் புதிய வரவாக உருப்பெற்றிப்பது மானிடச் சிறகுகள் என்னும் மகத்தான இந்நூல்.
அகிலம் போற்றும் அக்கினிச் சிறகை அமுதம் போல் இளையச் சமுதாயத்திற்கு ஆக்கியளித்த ஆகாய விஞ்ஞானி அப்துல்கலாமின் அறிமுகத்தோடு தொடங்கி… மண்ணில் வாழ்வதென்ன விண்ணையும் கண்டுதெளிவோம் என்னும் தீரத்துடன் முதல் மனிதனாய் நிலவில் பாதம் பதித்த நீல் ஆம்ஸ்டாங்கைத் தொடர்ந்து… ஓர் ஏழையாய் பிறந்து, ஓயாத உன்னத உழைப்பால் உயந்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முந்திநின்ற இராக் பெல்லரை இறுவாயிலாகக் கொண்ட… அறுபது அற்புத மனிதர்களல்ல புனிதர்கள், அவரவர் வாழ்கையின் உச்சத்தை அடைந்த அற்புதத்தை அகிலமறியச் செய்யும் அதிசயப் பெட்டகம் இந்நூல்.
கை, கால் என உடல் உறுப்புகள் எதுவுமின்றி, வெறும் முண்டமாய் பிறந்தும், உலகத்தின் இளைஞர்களுக்கு ஊக்க மருந்தென்னும் பண்டமாய் மாறிய கேரள மாநிலம் ஷிகாப் பூக் கோட்டூரின் வாழ்கையை ஒரு கதை சொல்லி போல் விவரித்திரிருக்கும் விதம் விசித்திரமானது.
மண்ணில் மனித குலத்தில் பிறந்தும், பரந்து விரிந்த உலகத்தை கண்திறந்து பார்க்க முடியாமலும், உலகத்தோடு ஒட்டி உறவாடி, வாய்திறந்து போச இயலாமலும், பிறர் கூறும் இன்செல்லைக் கேட்கும் திறனற்றும் திக்குமுக்காடி நின்றவள் அமெரிக்க நாட்டின் ஹெலன் கெல்லர்.
இன்று உலக நாடுகளில் கண்ணொளி இழந்தோர் கல்வியில் முன்னொளியாய் திகழ எழுத்துருவை உருவாக்கி முன்னோடியாகத் திகழும் கெல்லரின் வாழ்க்கையை, தன் எழுத்துத்திறத்தால் வாசிப்போரை வசீகரிக்கும் முறையில் எடுத்தியம்பியிருப்பதற்கு ஒரு வைர வாளையே பரிசளிக்கலாம் இவருக்கு.
இத்தேசத்தின் தென்கோடி கன்னியாகுமரியில் குடிசையில் பிறந்து, விண்வெளியில் வித்தைகளாயிரம் செய்த சிவனும், அசாமில் சுயமாகக் காடுவளர்த்து நாட்டுவளம் பேணி அரசின் கவனத்தை தன்பால் ஈர்த்த ஜாதவ் பயேலும், தன் வீரதீரத்தால் அண்டத்தையே அடக்கியாண்டு, இறுதியில் எடுத்துச் செல்லுவதற்கு ஒன்றுமில்லையென்று தன்னிரு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே நீட்டி, ஆறடி மண்ணுக்குள் அடைக்கலமான மாவீரன் நெப்போலியனும், வறுமையை மூலதனமாகக் கொண்டக் குடும்பத்தில், தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், மூன்றாவது குழந்தைக்கு வேண்டா வெறுப்புடன் வேண்டாம் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்ட பெண், இன்று ஜப்பான் நாட்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று தன் பிறவிப்பயனை தமிழகத்தில் திருவள்ளூரில் வசிக்கும் பெற்றோருக்கு உணர்த்திய பெண்மணியல்ல பொன்மணி என எப்பக்கம் புரட்டினாலும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் ஆறுபது வரலாற்று நாயக, நாயகிகளின் வாழ்க்கை நகல் இந்நூல்.
உள்ளூரில் உள்ளவர்களிலிருந்து, உலகளாவிலுள்ளோர் வரை பிறப்பால் இயலாமலும், இல்லாமலும் இருந்து, தங்களின் சீரிய முயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் உயர்ச்சி பெற்றோரை, அனைத்தும் உள்ளோருக்கு முன்னுதாரணமாய் திகழும் உதாரண புருஷர்களாக்கி, முடங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்திற்குப் புதிய உதிரமேற்றி, வெற்றியெனும் இமயத்தின் உச்சியிலேற சக்தி கொடுத்திருக்கிறது இவரது எழுதுகோல்.
பிறப்பால் உடலில் சக்தியிருந்தும், பிறந்த இடத்தில் செல்வ செழிப்புடன் அனைத்துமிருந்தும் வாழ்க்கை நெறி தவறி, போதைக்கும் பேதைக்கும் அடிமையாகி, வாழ்கையின் வசந்தங்கள் அனைத்தையுமிழந்து திசைமாறிச் செல்லும் நாளைய இளைய சமுதாயத்திற்கு சக்தியும் முக்தியும் தரும் வல்லமை இந்நூலுக்குண்டு.
ஒவ்வொருவரின் வாழ்கை வரலாற்றின் இறுவாயிலில் பொய்யாமொழியாரின் மெய்மொழியொன்றை பொருத்திக்காட்டியுள்ளார் இந்த மெய்ஞானப் புலவர். நூல்வகையில் இது கட்டுரை வடிவம் கொண்டிருந்தாலும், படிக்க படிக்க தீந்தேன் பருகும் சுவையை அனுபவிக்கும் விதத்தில் நல்ல கதை சொல்லும் பாங்கினையே கையாண்டிருப்பது வாசகர்களை, நுழைவாயிலிருந்து இறுவாயில் வரை ஒரே இருப்பில் வாசித்து முடிக்கும் அவாவுள்ளாக்கியிருப்பது நூலாசிரியருக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.
வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்போருக்கு இஃது ஓர் உந்து சக்தி.
வாழக்கையை வெற்றி கொள்ள நினைப்போருக்கு இது ஒரு கலங்கரை விளக்கு.
என்றும் சிநேகமுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.
அருமனை
23-03-2024.
(மிக அற்புதமான இந்நூலைப் பெற்றுக் கொள்வதற்கு நூலாசிரியரின் தொடர்புக்கு: 9 4 8 7 6 5 3 2 6 5)
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
All reactions