புலரட்டும் புதியத்
தமிழகம்…!
போதையில்லா
தமிழகத்திற்கு
பாதை
வகுப்போம்!
O
வஞ்சமென்னும்
இலஞ்சத்திற்கு
தஞ்சம்
கொடோம்!
O
ஊன் செய்யும்
ஊழலுக்கு
உறுதுணை
நில்லோம்!
O
படுபாதகமாம்
கொலையுடன் கொள்ளையை
களையெடுப்போம்…
O
இலவசமே
இல்லையென்று
சொல்லி மகிழ்வோம்!
O
ஓட்டுக்கு
நோட்டென்னும்
தீங்கினை தீயிடுவோம்!
O
ஆணவமும் அடாவடியும்
அரசியலில்
அகற்றிடுவேம்!
O
அணைகளாயிரம் கட்டுவோம்
ஆலைகள் தொழிற்சாலைகள்
பதினாயிரம் அமைப்போம்!
O
ஊருக்கொருப் பள்ளி
அனைவருக்கும்
பேதமில்லாக் கல்வி
வகுப்புக்கோராசிரியர்
வழிவகைச் செய்வோம்!
O
மும்மொழிக் கொள்கை
உயர்தரக் கல்வி
தொழில்மயத் தமிழகம்
இதுவே
தாரக மந்திரமாக்குவோம்(இக்கவிதை பிப்ரவரி 2017 ஒளிவெள்ளம் மாத இதழில் பிரசுரமானது.)
No comments:
Post a Comment