Tuesday, 14 February 2017

 புலரட்டும் புதியத்  தமிழகம்…!                                             
                     

  போதையில்லா
  தமிழகத்திற்கு
  பாதை வகுப்போம்!
  O
வஞ்சமென்னும்
 இலஞ்சத்திற்கு
  தஞ்சம் கொடோம்!
 O
 ஊன் செய்யும்
  ஊழலுக்கு
  உறுதுணை நில்லோம்!
  O
  படுபாதகமாம்
  கொலையுடன் கொள்ளையை
 களையெடுப்போம்…
 O
 இலவசமே
 இல்லையென்று                                 
 சொல்லி மகிழ்வோம்!
 O
 ஓட்டுக்கு
 நோட்டென்னும்
 தீங்கினை தீயிடுவோம்!
 O
 ஆணவமும் அடாவடியும்
 அரசியலில்
 அகற்றிடுவேம்!
 O
 அணைகளாயிரம் கட்டுவோம்
 ஆலைகள் தொழிற்சாலைகள்
 பதினாயிரம் அமைப்போம்!
 O
 ஊருக்கொருப் பள்ளி
 அனைவருக்கும்
 பேதமில்லாக் கல்வி
 வகுப்புக்கோராசிரியர்
 வழிவகைச் செய்வோம்!
 O
 மும்மொழிக் கொள்கை                           
 உயர்தரக் கல்வி
 தொழில்மயத் தமிழகம்
 இதுவே
  தாரக மந்திரமாக்குவோம்

  (இக்கவிதை பிப்ரவரி 2017 ஒளிவெள்ளம் மாத இதழில் பிரசுரமானது.)

No comments:

Post a Comment