ஐ.இ.தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 06:30 மணிக்கு நம்முடன் பேசுகிறார் கல்வியாளர் கமல. செல்வராஜ்!
கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்
IE Tamil Facebook Live Educationist munaivar Kamala Selvaraj : கொரோனா காலத்தில் ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் ஐ.இ. தமிழ் வாசகர்களை சந்தித்து பேசி வருகின்றனர் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்.
அந்த வரிசையில் இன்று நம்முடன் உரையாட உள்ளார் முனைவர்.கமல செல்வராஜ். இவர் இன்று கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்தும் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்தும் பேச உள்ளார்.
கல்வியாளராக இருக்கும் இவரிடம் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் கலைகளை எவ்வாறு ஆர்வத்துடன் கற்றுக் கொடுப்பது? அவர்களை எவ்வாறு பல்வேறு திறமைகளில் என்கேஜ்டாக வைத்திருப்பது என்பது குறித்தும் பேச உள்ளார். அவருடன் நேரலையில் நீங்கள் ஆலோசனை செய்து உங்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தெரிந்துகொள்ளலாம். அவருடன் உரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சரியாக இன்று மாலை 06:30 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
No comments:
Post a Comment