குமரி குயிஸ்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் ஒரு வரப்பிரசாதமான மாவட்டமாகும். தமிழ் இலக்கியம் குறிப்பிடும் ஐவகை நிலத்தில் பாலை தவிர்த்து நான்கு நில வகைகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் முத்துக்களாகவும் மாணிக்கங்களாகவும் ஒளிந்து, மறைந்துக் கிடக்கும் தகவல்கள் ஏராளம்.அவற்றை எளிமையாகவும் இனிமையாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் வண்ணம் வழங்க இந்தப் புதிய முயற்சியை வினா விடை முறையில் “ஹலோ கன்னியாகுமரி” மூலம் தொடங்கியுள்ளேன்.
வினா
1. . கன்னியாகுமரி மாவட்டம் முன்பு எந்த மாநிலத்துடன்
இணைந்திருந்தது?
2. கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
3. கன்னியாகுமரி மாவட்டத்தின் பரப்பளவு?
4. குமரி மாவட்டத்திலுள்ள தாலுகாக்கள் எத்தனை? அவை யாவை?
5. குமரியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
6. கன்னியாகுமரி மாவட்டம் முழூ எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
7. இந்தியாவின் எல்லையைக் குறிப்பிடும் போது “வடக்கில்
இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரி முனை பாப்பா” என்று குறிப்பிட்ட கவிஞ்ஞர் யார்?
8. குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுவது எது?
9. கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த இடத்தில் முன்று கடல்கள் சங்கமிக்கின்றன?
10. கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் எவ்வளவு?
விடைகள்
1) கேரளா. 2.) 1956. 3). 1684.4 ச.கி.மீ. 4). 4 தாலுகாக்கள். அவை, அகஸ்தீஸ்வரம்,. தோவாளை, கல்குளம், விளவங்கோடு. 5)மார்சல் நேசமணி. 6) 1992. 7). மகாகவி சுப்பிரமணிய பாரதி 8)திற்பரப்பு அருவி. 9). கன்னியாகுமரி. 10). 133 அடி.
ஹலோ கன்னியாகுமரி ஏப்ரல் 2011.
No comments:
Post a Comment