kamalaselvaraj
Monday, 2 March 2020
ABOUT ME
பாண்டியன்
சுந்தரம்
is with
Vinoth Pandian
and
Mani
Kandan
.
February 28 at 2:35 AM
·
ஆதரவற்ற
இல்லத்தில்
இருந்த
பெண்
மினியை
திருமணம்
செய்த
கமல
செல்வராஜ்
,
இன்று
ஆதரவற்ற
பெண்களை
வளர்த்து
கரை
சேர்ப்பதை
லட்சியமாகக்
கொண்டிருக்கிறார்
!
அந்தத்
திருமணம்
ஆடம்பரமாக
நடைபெற்றது
.
ஸ்ரீதேவி
என்ற
பெண்ணுடைய
திருமணம்
அது
.
எல்லோரும்
மகிழ்ச்சிக்கடலில்
ஆழ்ந்திருக்க
இரண்டு
பேர்
கண்களில்
மட்டும்
கண்ணீர்
திரண்டிருந்தது
.
அவர்கள்
கமலசெல்வராஜ்
அவரது
மனைவி
மினி
செல்வராஜ்
.."
என்னப்பா
,
என்னம்மா
..
மகிழ்ச்சியான
தருணம்
தானே
இது
?
நம்முடைய
அக்காவுக்குத்
தானே
திருமணம்
நடைபெறுகிறது
?
நீங்கள்
இருவரும்
ஏன்
கண்
கலங்கி
நிற்கிறீர்கள்
?"
என்று
கேட்டவர்கள்
வேறு
யாருமல்ல
கமலசெல்வராஜ்
-
மினி
தம்பதியினரின்
மகள்
ஆதர்ஷாவும்
மகன்
ஆதர்ஷும்
..
அவர்கள்
'
அக்கா
'
என்று
குறிப்பிட்ட
ஸ்ரீதேவி
கூடப்
பிறந்த
அக்கா
இல்லை
;
ஆனாலும்
கூடப்
பிறந்த
அக்கா
மாதிரிதான்
.
கமலசெல்வராஜும்
மேலும்
எட்டு
நண்பர்களும்
சேர்ந்து
ஆதரவற்ற
பெண்களுக்கு
உதவ
வேண்டும்
என்ற
எண்ணத்தில்
சிதறால்
பகுதியில்
சித்ராலயா
இல்லம்
ஒன்றைத்
தொடங்கி
நடத்தி
வருகிறார்கள்
. 28
பிள்ளைகள்
அங்கே
இருக்கிறார்கள்
.
அவர்களில்
ஒருவர்தான்
ஸ்ரீதேவி
.
ஸ்ரீதேவியை
நர்சிங்
படிப்பு
படிக்க
வைத்து
இருக்கிறார்கள்
.
இப்போது
அவருக்குத்
தகுந்த
மணமகனைத்
தேடிக்
கண்டுபிடித்து
,
திருமணம்
செய்து
வைத்திருக்கிறார்கள்
..
கமலசெல்வராஜும்
மினியும்
கண்
கலங்கியது
எதற்காக
என்பதைத்
தங்கள்
மகன்
மகளிடம்
சொல்லத்
தொடங்கினார்கள்
..."
பழைய
ஞாபகம்
எங்களுக்கு
வந்துவிட்டது
"
என்று
ஒரே
நேரத்தில்
இருவரும்
கோரசாகச்
சொல்லி
முடித்தார்கள்
..
கமலசெல்வராஜின்
அப்பா
கமலன்
விவசாயி
.
அம்மா
கமலம்மாள்
.
குமரி
மாவட்டத்தின்
அருமனை
கிராமத்தில்
வசித்து
வந்தார்கள்
.
இவர்களுக்கு
மூன்று
பெண்கள்
.
நான்கு
ஆண்கள்
.
ஆக
மொத்தம்
ஏழு
குழந்தைகள்
.
மிக
மிக
வறுமையான
குடும்பம்
.
கமலசெல்வராஜுக்கு
11
வயது
நடக்கையில்
அதாவது
ஆறாம்
வகுப்பு
படிக்கும்போதே
அப்பா
இறந்துவிட்டார்
.
குடும்பம்
திக்குத்
தெரியாமல்
திகைத்து
நின்றது
."
இனி
நாங்க
என்ன
பண்ணுவோம்னு
தெரியலையே
.
ஒரு
தீப்பெட்டி
வாங்கக்கூட
வழியில்லேயே
"
என்று
எல்லோருக்கும்
மூத்த
அக்கா
சொல்லிக்
கதறி
அழுதார்
.
அம்மா
வாழ்க்கையை
தைரியமாக
எதிர்
கொண்டார்
.
சின்னச்
சின்ன
வேலைகளுக்குப்
போக
ஆரம்பித்தார்
.
தமிழ்நாட்டில்
ரேஷன்
அரிசியை
வாங்கி
கேரளாவுக்குக்
கொண்டுபோய்
விற்று
சம்பாதிக்க
வேண்டிய
அளவுக்கு
வறுமை
வீட்டில்
தாண்டவமாடியது
.
அரிசி
நிறைத்த
பையை
தலை
சும்மாடாகக்
கொண்டு
போவார்
அம்மா
.
நேர்வழியில்
போனால்
காவல்துறையினர்
பிடித்துவிடுவார்கள்
என்று
அம்மா
ரப்பர்
தோட்டங்களுக்குள்
புகுந்து
புறப்பட்டுப்
போவார்
.
அவ்வளவு
கஷ்டப்பட்டு
தான்
குடும்பத்தை
கரையேற்ற
வேண்டியிருந்தது
.
இருந்தாலும்
எல்லாக்
குழந்தைகளுக்கும்
படிப்பு
கொடுப்பது
என்பது
அந்தத்
தாய்க்கு
மிகவும்
முடியாத
காரியமாகவே
இருந்தது
.
அதனால்
கமலசெல்வராஜை
தனது
சகோதரன்
பொறுப்பில்
படிக்கவைக்க
அனுப்பினார்
அம்மா
.
தாய்
மாமாவின்
தயவில்
பத்தாம்
வகுப்பு
வரை
படித்து
முடித்தார்
கமலசெல்வராஜ்
.
அதன்
பிறகு
படித்துக்கொண்டே
கூலி
வேலைகள்
பார்க்கப்
போனார்
.
ரப்பர்
பால்
வெட்டுகிற
வேலை
கிடைக்கவே
அதிலும்
தன்னை
ஈடுபடுத்திக்கொண்டு
பட்டப்படிப்பு
படித்து
முடித்தார்
கமலசெல்வராஜ்
.
ரப்பர்
பால்
எடுக்கும்
போது
உடம்பு
பூரா
துர்நாற்றம்
வீசும்
.
கல்லூரி
படிக்கும்
காலங்களில்
ரப்பர்
பாலுடைய
துர்நாற்றம்
தன்னிடம்
இருந்து
வந்து
மற்ற
மாணவர்கள்
முகம்
சுளிக்க
அதுவே
காரணமாகிவிடுமோ
என்று
எண்ணி
அவர்களிடம்
இருந்து
விலகியே
இருந்தார்
கமலசெல்வராஜ்
.
ஆனாலும்
படிப்பில்
மிகத்
திறமைசாலியாக
இருந்தார்
.
பட்டப்படிப்பை
முடித்து
பின்னர்
முனைவர்
பட்டமும்
பெற்றார்
இவர்
.
படித்த
பாடங்கள்
மூலம்
சீர்திருத்தமான
எண்ணங்களை
தன்
மனதில்
வளர்த்துக்
கொண்டு
வந்தார்
கமலசெல்வராஜ்
.
தன்னுடைய
குடும்ப
வறுமை
,
வீட்டில்
இவரோடு
கூடப்பிறந்த
பெண்
பிள்ளைகள்
பட்ட
கஷ்டங்கள்
,
இவரை
வரதட்சணை
தவிர்த்து
புரட்சித்
திருமணம்
செய்ய
வேண்டும்
என்ற
லட்சியத்தை
நோக்கித்
தள்ளியது
.
ஆரம்பத்தில்
விதவைத்
திருமணம்
,
சாதி
மறுப்புத்
திருமணம்
இவற்றையெல்லாம்
செய்யலாம்
என்று
நினைத்த
கமலசெல்வராஜ்
மனதில்
கடைசியாக
ஆதரவற்ற
ஒரு
பெண்ணுக்கு
வாழ்வு
தருவோம்
என்ற
எண்ணமே
நிலைபெற்று
இறுதியானது
.
ஆதரவற்ற
பெண்ணை
திருமணம்
முடிக்க
கமலசெல்வராஜ்
ஓராண்டு
காத்திருக்க
வேண்டியதாயிற்று
.
திருவனந்தபுரத்தில்
அரசு
நடத்தும்
ஸ்ரீ
சித்ரா
ஆதரவற்றோர்
இல்லம்
சென்று
தனது
விருப்பத்தைச்
சொன்னார்
கமல
செல்வராஜ்
.
மாவட்ட
ஆட்சியர்
தான்
அந்த
மையத்தின்
தலைவர்
.
மையத்தில்
உள்ள
பெண்ணை
திருமணம்
செய்ய
யாரேனும்
விரும்பினால்
அவரைப்பற்றிய
எல்லா
விவரங்களையும்
முழுமையாக
அறிந்து
கொள்வது
அந்த
மையத்தின்
நடைமுறை
.
மணமுடிக்கும்
மணமகனுக்கு
சொந்த
வீடு
நிரந்தர
வருமானம்
குடும்பத்தினர்
சம்மதம்
உடல்
தகுதிச்
சான்று
இவையெல்லாம்
சரியாக
இருக்கிறதா
என்று
பார்ப்பார்களாம்
.
கமல
செல்வராஜ்
இவற்றையெல்லாம்
கடந்து
வர
ஓராண்டு
ஆகிவிட்டது
.
ஆதரவற்றோர்
இல்லத்தில்
இருந்த
400
இளம்பெண்களில்
கமலசெல்வராஜின்
வயது
தகுதிக்கு
ஏற்ப
மூன்று
பெண்களை
மையம்
பரிந்துரைத்தது
.
அதில்
மினியை
தேர்வு
செய்து
திருமணம்
செய்து
கொண்டார்
கமலசெல்வராஜ்
.
பரதநாட்டியக்
கலைஞராக
இருந்தார்
மினி
.
ஆதரவற்ற
மினிக்கு
நல்
வாழ்வு
கொடுத்த
மகிழ்ச்சி
கமலசெல்வராஜின்
வாழ்வில்
நிலைபெற
,
இப்போது
இரண்டு
குழந்தைகளுக்கு
நல்ல
தகப்பனாக
விளங்கி
வருகிறார்
.
வீட்டிலேயே
பரதம்
சொல்லிக்
கொடுத்து
வருகிறார்
மினி
.
"
சொல்லுவது
எல்லோருக்கும்
மிகவும்
சுலபம்
;
சொன்னபடி
நடப்பவர்கள்
மிகவும்
சொற்பம்
"
என்ற
கவிதை
வரிகளுக்கு
ஏற்பவே
வாழ்பவர்கள்
மத்தியில்
,
சொல்லும்
செயலும்
ஒன்றாக
வாழ்பவர்
தான்
கமல
செல்வராஜ்
.
எம்
.
ஏ
,
எம்
.
ஃபில்
,
எம்
.
எட்
,
டி
.
ஜே
என
பல
பட்டங்கள்
பெற்றிருக்கும்
இவர்
,
இப்போது
படந்தாலுமூடு
பகுதியிலுள்ள
பிஎட்
கல்லூரியில்
முதல்வராகப்
பணியாற்றி
வருகிறார்
.
பத்திரிக்கையாளர்
,
எழுத்தாளர்
,
பேச்சாளர்
என்ற
பன்முகத்
திறமை
இவருக்கு
உண்டு
.
இவரது
கவிதை
மற்றும்
கட்டுரைகள்
நூலாக்கம்
பெற்றிருக்கிறது
.
இவரது
படைப்புகள்
மீது
ஆய்வு
செய்திருப்பவர்களின்
எண்ணிக்கை
ஐந்துக்கும்
மேலாக
இருக்கிறது
.
இவரிடம்
தொலைபேசியில்
உரையாடினோம்
:"
ஆதரவற்ற
பெண்களுக்கு
உதவ
சித்ராலயா
இல்லம்
ஒன்பது
நண்பர்கள்
ஒன்று
சேர்ந்து
துவக்கி
இருக்கிறோம்
.
அதில்
ஒரு
பெண்ணாகிய
ஸ்ரீதேவிக்கு
சென்ற
வாரம்தான்
திருமணம்
செய்து
வைத்தோம்
.
அதே
மாதிரி
மற்ற
பிள்ளைகளையும்
கரை
சேர்க்க
வேண்டும்
"
15
ஆண்டுகளுக்கு
முன்பே
தன்
உடலை
அரசு
மருத்துவக்
கல்லூரிக்கு
தானமாக
எழுதி
வைத்திருக்கிறார்
கமல
செல்வராஜ்
.
தன்
காலத்துக்குப்
பிறகு
தன்
உடல்
பாகங்களால்
பல
உயிர்கள்
பிழைத்திருக்கும்
என்று
நினைக்கும்
போது
மனசுக்கு
நிம்மதியாக
இருப்பதாக
உணர்கிறார்
கமலசெல்வராஜ்
.
இப்படிப்பட்ட
சேவை
மனப்பான்மை
அனைவருக்கும்
வரவேண்டும்
என்று
ஆசைப்படுகிறார்
கமலசெல்வராஜ்
!
பாடம்
நடத்துவதோடு
நின்றுவிடாமல்
,
தன்
வாழ்க்கையையே
பாடமாக்கி
வாழ்ந்து
வரும்
கமல
செல்வராஜ்
போன்றவர்களால்
மேலும்
அர்த்தமுள்ளதாக
ஆகிறது
வாழ்க்கை
!
இவரது
முகவரி
:
கமலசெல்வராஜ்
,
சித்ராலயம்
,
அருமனை
-629 151
கைபேசி
: 9443559841
(
இது ஒரு முகநூல் பதிவு)
25 Comments
28 Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment