Friday, 15 March 2019


                    பொது அறிவுச் சுடர்.

     வாழ்த்துரை.                                                 

                                            
     எழுத்தையே மூச்சாகக் கொண்டவர் பெரியவர் சி. வின்சென்ட் அவர்கள்.
     ஆரம்பக்காலத்தில் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கிய அவரது எழுத்துப்பணி, இன்று பயனுள்ள ஒன்பது நூல்களின் ஆசிரியர் என்ற உன்னத நிலைக்கு அவரை உயர்த்தியுள்ளது.
     இதுவரை அவர் எழுதியுள்ள அனைத்து நூல்களும் விவிலியத்தை அடியொற்றியுள்ளவை.
     பொது அறிவுச் சுடர் என்னும் இந்நூல் அவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் பயனுடைய நூலாக அமைந்திருப்பது பாராட்டிற்குரியது.
     அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் தகவல் திரட்டு என்பது அனைவரின் கைக்குள் வந்து விட்டது. இந்நிலையில் இதுபோன்ற நூல்கள் அவசியமா? என்ற வினா பலருள் எழுவது நியாயமானது.
     எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் அவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத மக்கள் இவ்வுலகம் உள்ளளவும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்ற நூல்கள் வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்.
     எழுத்தாற்றலோடு, இசை, ஓவியம், சிற்பம், கட்டடம் கட்டுதல்  ஆகிய கலைகளிலும் கைதேர்ந்த கலைஞராக விளங்குபவர் இந்நூலாசிரியர் திரு. வின்சென்ட் அவர்கள்.
     அன்னாரது இடைவிடாத எழுத்து மற்றும் கலைப் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க அனைவரும் இதயபூர்வமாய் துணை நிற்போம்.
                                         என்றும் சிநேகங்களுடன்…
                                         டாக்டர் கமல. செல்வராஜ்           
அருமனை,
01-11-2018.     

No comments:

Post a Comment