மானுடத்தின் மணிமகுடம்.
இக்கட்டுரை புதிய தேடல் என்னும் மாத இதழில்(டிசம்பர் 2017 ) பிரசுரமாகியுள்ளது.
நான் சிறுவனாக இருக்கும் போது, ஆண்டுதோறும் ஓணம் மற்றும் கிறிஸ்மஸ் ஆகிய இரு பண்டிகைகளையும் எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
இவ்விருப் பண்டிகை நாள்களில் மட்டும்தான் வீட்டில் வயிராற அறுசுவை உணவும் பல்வகைப் பலகாரங்களும் கிடைக்கும். கூடவே நாள் முழுவதும் நண்பர்களுடன் சுதந்திரமாக விளையாடுவதற்கான அனுமதியும் அளிப்பார்கள்.
ஓணத்திற்கு அடையாளம், வீட்டின் அருகிலுள்ள மரங்களில் ஊஞ்சலும் வீடுகளின் முற்றத்தில் சிறிய சிறிய அத்தப்பூ களங்களுமே ஆகும். அதுபோல் கிறிஸ்மஸ்சிற்கு அடையாளம், வீடுகளின் முன்பு மின்னித் துலங்கும் நட்சத்திரங்களின் (ஸ்டார்) அலங்காரமும் முற்றங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறிய சிறிய புல்குடில்களும் ஆகும்.
அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். என்றாலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கிய உடன், அவர்களின் வீடுகளின் முன்பு புல்குடில்கள் அமைத்து விடுவார்கள். அக்குடிலில் குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் விதத்தில் இயேசுகிறிஸ்துவின் சிறு சிறு பொம்மைகள், ஆட்டுக்குட்டிகள், பசுக்களின் பொம்மைகள், கன்னிமரியா உட்பட கிறிஸ்தவர்கள் புனிதர்களாகக் கருதப்படுபவர்களின் சொரூபங்கள் வரையிலும் வைக்கப்பட்டிருக்கும்.
அதன் மூலம்தான் இயேசுகிறிஸ்துவின் மகத்துவம் நிறைந்த பிறப்பைப் பற்றி பிறர் அறிந்து கொள்வதற்கு இயலும். அவர் மனித குலத்தின் இரட்சகராய் இப்பூவுலகில் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தார் என்ற தத்துவத்தை மிகவும் தத்துருவமாக அப்புல்குடில்கள் விளக்கி நிற்கும்.
அப்புல்குடில்கள் பார்ப்பதற்கு எவ்விதமானக் கவர்ச்சிகளும் அற்றவையாக இருக்கும். ஆடம்பரமான அலங்காரங்கள் இருக்கவே இருக்காது. பார்ப்பவர்களைப் பற்றியிழுக்கும் கருணை, இரக்கம், அன்பு, தியாகம், பக்தி ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாகவே அவை அமைக்கப் பட்டிருக்கும்.
கூடவே நவம்பர் மாதத்தின் கடைசி அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து வீடுகள்தோறும் சென்று பஜனை பாடுவதற்குத் தொடங்கி விடுவார்கள். அப்பஜனை ஒவ்வொரு நாளும் இரவில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டைக்கூட விட்டு வைக்காமல் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களின் வீடுகளிலும் பாடப்படும். அதனால் எப்பொழுது பஜனைப் படுவதற்கு வருவார்கள் என்ற எதிர்ப்பார்புடனே ஒவ்வொரு வீட்டாரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
அதுபோன்றே கிறிஸ்மஸ் வந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமோ கொண்டாட்டம். ஏனென்றால் வீட்டில் வரும் விருந்தினர்கள் விதவிதமான கேக் மற்றும் பல விதமானப் பலகாரங்களை வாங்கி வருவார்கள். கூடவே எங்கள் வீட்டிலும் பணியாரத்திலிருந்து தொடங்கி உண்ணியப்பம் வரைப் பலவிதமான பலகாரங்களைச் சில நாள்களுக்கு முன்பே செய்து, நாங்களும் செழிப்பாகச் தின்று விட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிப்போம். அது போலவே அயல் வீடுகளிலிருந்து எங்களுக்கும் வந்து சேரும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக ஓணம், கிறிஸ்மஸ் ஆகிய இரு தினங்களிலும் வீட்டைத் தவிர வெளியே கடைகளில் சென்று ஒருவர் கூட சாப்பிட மாட்டார்கள். அதைப் போன்று போதைப் பொருள்களை அருந்திவிட்டு தெருவில் அலைந்து திருபவர்களையோ, அட்டகாசம் செய்பவர்களையோ பார்க்கவே முடியாது. அவ்வாறு செய்தால் அதை பெரும் அவமானமாகவே அனைவரும் கருதுவார்கள்.
இதனால் கிறிஸ்மஸ் அல்லது கிறிஸ்தவர்கள் என்றாலே பிற மதத்தைச் சார்ந்த மக்கள் மத்தியிலும் ஒரு மகத்தான மரியாதை இருந்தது. அவர்கள் வழிபடும் பிதாமகன் இயேசு கிறிஸ்துவும் மானுடத்தின் மணிமகுடமாகவே மதிக்கப்பட்டு வந்தார்.
இவ்வளவு மேன்மையும் மகத்துவமும் நிறைந்த விழாவாக இருந்த கிறிஸ்மஸ் இன்று அதன் மகத்துவத்தின் அடிநாளத்திலிருந்து சற்றே விலகித்தான் செல்கிறதோ என்ற ஐயப்பாடுதான் எழுகிறது.
ஏனென்றால் மானுடத்தின் மணிமகுடமாகத் திகழும் அந்தப் பிதாமகனின் எளியப் பிறப்பை சித்தரிக்கும் விதமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீட்டு முற்றத்திலும் எவ்விதப் பணச் செலவுமின்றி, மிக எளிமையாக அமைக்கப்பட்டு வந்த புல்குடில்கள், இன்று பொது இடங்களில் பல லட்சம் பணத்தைச் செலவழித்து, வான்முட்ட உயர்ந்த போட்டிக் கோபுரங்களாக மாற்றியுள்ளனர். அதோடு பொதுமக்களின் காட்சிப் பொருளாகவும் மாற்றி, வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரு தலை சிறந்த உத்தியாக்கியுள்ளனர்.
இதனால் இதுவரை மக்கள் மனங்களில் எளிமையின் அடையாளமாக, கருணையின் வடிவமாகக் கருதப்பட்டு வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் தத்துவம், இளைய மற்றும் புதிய தலைமுறையினருக்கு திரித்து உணர்த்தப்படுவதாக மாறிப்போகுமோ என்ற பயப்பாடு பழம் பெரும் கிறிஸ்தவ ஞானிகளின் மனங்களில்கூட எழத்தொடங்கியுள்ளது என்பது எதார்த்தமான உண்மை.
அதைப் போன்றே அக்காலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடுகளிலும் பாடப்பட்டு வந்த பஜனை முறையும் இன்று அடியோடு, அதன் அடிப்படை நோக்கத்தை மறந்து திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான நிஜம்.
ஏனென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவச் சபையைச் சார்ந்தவர்களும் அவரவர் சபையினரின் வீடுகள் எங்கிருக்கிறது எனத் தேடிப் பிடித்து, அவர்களின் வீடுகளில் மட்டும் சென்று ஒரேயொரு நாள் மட்டும் பஜனை பாடும் பழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். பிற மதத்தினரின் வீட்டு முற்றத்தில் நின்று பஜனைப் பாடுவதை முற்றிலும் மறந்து வருகிறார்கள். அதனால் முந்தைய காலங்களில் பிற மதத்தினரோடு கொண்டிருந்த அணுகு முறைக்கும் குந்தகம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது என்பதை நடுநிலையான கிறிஸ்தவர்கள் உணரத்தான் செய்கிறார்கள்.
இவற்றைப் போன்றுதான் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள்களை அருந்தி விட்டு வீட்டிலும் ரோட்டிலும் ஆர்ப்பாட்டம் செய்தால்தான் ஓணமும் கிறிஸ்மஸ்சும் வந்து விட்டது என அறிவார்கள் என ஆண்களும் இளம் தலைமுறையிலும் நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். இது உண்மை என்பதை நிருபிப்பதற்கு இன்றைய டாஸ்மாக் கடைகளின் வியாபார விகிதமே சான்றாகும்.
டாஸ்மாக் கடைகளில் கிறிஸ்மஸ்சிற்கு முந்தய நாள் விற்பனையும் அன்றைய நாள் விற்பனையும் பிற நாள்களின் விற்பனையை விட பத்து மடங்கு அதிகம் என்பது அவற்றின் விற்பனை கணக்கீடு தரும் புள்ளி விவரம். இதே நிலைதான் ஓணப் பண்டிகையன்றும் நடைபெறுகிறது என்பதொன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.
இப்படி கிறிஸ்மஸ் பண்டிகையானது தற்போது வீடுகளில் புல்குடில் அமைப்பதிலிருந்து தொடங்கி… பஜனைப் பாடுவதில் தொடர்ந்து… கொண்டாட்டம் வரையிலும் பல்வேறு பரிணாம மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அபரிதமாக உயர்ந்துள்ளது. இம்மாற்றங்களும் உயர்வுகளும் ஒரு போதும் அந்த மானிடத்தின் மணிமகுடத்தின் மாண்புக்கு மாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்றால் மட்டுமே கிறிஸ்தவத்தின் விழுதுகள் மேலும் மேலும் விடர்ந்தெழும்.
இக்கட்டுரை புதிய தேடல் என்னும் மாத இதழில்(டிசம்பர் 2017 ) பிரசுரமாகியுள்ளது.
நான் சிறுவனாக இருக்கும் போது, ஆண்டுதோறும் ஓணம் மற்றும் கிறிஸ்மஸ் ஆகிய இரு பண்டிகைகளையும் எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
இவ்விருப் பண்டிகை நாள்களில் மட்டும்தான் வீட்டில் வயிராற அறுசுவை உணவும் பல்வகைப் பலகாரங்களும் கிடைக்கும். கூடவே நாள் முழுவதும் நண்பர்களுடன் சுதந்திரமாக விளையாடுவதற்கான அனுமதியும் அளிப்பார்கள்.
ஓணத்திற்கு அடையாளம், வீட்டின் அருகிலுள்ள மரங்களில் ஊஞ்சலும் வீடுகளின் முற்றத்தில் சிறிய சிறிய அத்தப்பூ களங்களுமே ஆகும். அதுபோல் கிறிஸ்மஸ்சிற்கு அடையாளம், வீடுகளின் முன்பு மின்னித் துலங்கும் நட்சத்திரங்களின் (ஸ்டார்) அலங்காரமும் முற்றங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறிய சிறிய புல்குடில்களும் ஆகும்.
அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். அதிலும் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். என்றாலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கிய உடன், அவர்களின் வீடுகளின் முன்பு புல்குடில்கள் அமைத்து விடுவார்கள். அக்குடிலில் குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் விதத்தில் இயேசுகிறிஸ்துவின் சிறு சிறு பொம்மைகள், ஆட்டுக்குட்டிகள், பசுக்களின் பொம்மைகள், கன்னிமரியா உட்பட கிறிஸ்தவர்கள் புனிதர்களாகக் கருதப்படுபவர்களின் சொரூபங்கள் வரையிலும் வைக்கப்பட்டிருக்கும்.
அதன் மூலம்தான் இயேசுகிறிஸ்துவின் மகத்துவம் நிறைந்த பிறப்பைப் பற்றி பிறர் அறிந்து கொள்வதற்கு இயலும். அவர் மனித குலத்தின் இரட்சகராய் இப்பூவுலகில் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தார் என்ற தத்துவத்தை மிகவும் தத்துருவமாக அப்புல்குடில்கள் விளக்கி நிற்கும்.
அப்புல்குடில்கள் பார்ப்பதற்கு எவ்விதமானக் கவர்ச்சிகளும் அற்றவையாக இருக்கும். ஆடம்பரமான அலங்காரங்கள் இருக்கவே இருக்காது. பார்ப்பவர்களைப் பற்றியிழுக்கும் கருணை, இரக்கம், அன்பு, தியாகம், பக்தி ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாகவே அவை அமைக்கப் பட்டிருக்கும்.
கூடவே நவம்பர் மாதத்தின் கடைசி அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து வீடுகள்தோறும் சென்று பஜனை பாடுவதற்குத் தொடங்கி விடுவார்கள். அப்பஜனை ஒவ்வொரு நாளும் இரவில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டைக்கூட விட்டு வைக்காமல் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களின் வீடுகளிலும் பாடப்படும். அதனால் எப்பொழுது பஜனைப் படுவதற்கு வருவார்கள் என்ற எதிர்ப்பார்புடனே ஒவ்வொரு வீட்டாரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
அதுபோன்றே கிறிஸ்மஸ் வந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமோ கொண்டாட்டம். ஏனென்றால் வீட்டில் வரும் விருந்தினர்கள் விதவிதமான கேக் மற்றும் பல விதமானப் பலகாரங்களை வாங்கி வருவார்கள். கூடவே எங்கள் வீட்டிலும் பணியாரத்திலிருந்து தொடங்கி உண்ணியப்பம் வரைப் பலவிதமான பலகாரங்களைச் சில நாள்களுக்கு முன்பே செய்து, நாங்களும் செழிப்பாகச் தின்று விட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிப்போம். அது போலவே அயல் வீடுகளிலிருந்து எங்களுக்கும் வந்து சேரும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக ஓணம், கிறிஸ்மஸ் ஆகிய இரு தினங்களிலும் வீட்டைத் தவிர வெளியே கடைகளில் சென்று ஒருவர் கூட சாப்பிட மாட்டார்கள். அதைப் போன்று போதைப் பொருள்களை அருந்திவிட்டு தெருவில் அலைந்து திருபவர்களையோ, அட்டகாசம் செய்பவர்களையோ பார்க்கவே முடியாது. அவ்வாறு செய்தால் அதை பெரும் அவமானமாகவே அனைவரும் கருதுவார்கள்.
இதனால் கிறிஸ்மஸ் அல்லது கிறிஸ்தவர்கள் என்றாலே பிற மதத்தைச் சார்ந்த மக்கள் மத்தியிலும் ஒரு மகத்தான மரியாதை இருந்தது. அவர்கள் வழிபடும் பிதாமகன் இயேசு கிறிஸ்துவும் மானுடத்தின் மணிமகுடமாகவே மதிக்கப்பட்டு வந்தார்.
இவ்வளவு மேன்மையும் மகத்துவமும் நிறைந்த விழாவாக இருந்த கிறிஸ்மஸ் இன்று அதன் மகத்துவத்தின் அடிநாளத்திலிருந்து சற்றே விலகித்தான் செல்கிறதோ என்ற ஐயப்பாடுதான் எழுகிறது.
ஏனென்றால் மானுடத்தின் மணிமகுடமாகத் திகழும் அந்தப் பிதாமகனின் எளியப் பிறப்பை சித்தரிக்கும் விதமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீட்டு முற்றத்திலும் எவ்விதப் பணச் செலவுமின்றி, மிக எளிமையாக அமைக்கப்பட்டு வந்த புல்குடில்கள், இன்று பொது இடங்களில் பல லட்சம் பணத்தைச் செலவழித்து, வான்முட்ட உயர்ந்த போட்டிக் கோபுரங்களாக மாற்றியுள்ளனர். அதோடு பொதுமக்களின் காட்சிப் பொருளாகவும் மாற்றி, வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரு தலை சிறந்த உத்தியாக்கியுள்ளனர்.
இதனால் இதுவரை மக்கள் மனங்களில் எளிமையின் அடையாளமாக, கருணையின் வடிவமாகக் கருதப்பட்டு வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் தத்துவம், இளைய மற்றும் புதிய தலைமுறையினருக்கு திரித்து உணர்த்தப்படுவதாக மாறிப்போகுமோ என்ற பயப்பாடு பழம் பெரும் கிறிஸ்தவ ஞானிகளின் மனங்களில்கூட எழத்தொடங்கியுள்ளது என்பது எதார்த்தமான உண்மை.
அதைப் போன்றே அக்காலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடுகளிலும் பாடப்பட்டு வந்த பஜனை முறையும் இன்று அடியோடு, அதன் அடிப்படை நோக்கத்தை மறந்து திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான நிஜம்.
ஏனென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவச் சபையைச் சார்ந்தவர்களும் அவரவர் சபையினரின் வீடுகள் எங்கிருக்கிறது எனத் தேடிப் பிடித்து, அவர்களின் வீடுகளில் மட்டும் சென்று ஒரேயொரு நாள் மட்டும் பஜனை பாடும் பழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். பிற மதத்தினரின் வீட்டு முற்றத்தில் நின்று பஜனைப் பாடுவதை முற்றிலும் மறந்து வருகிறார்கள். அதனால் முந்தைய காலங்களில் பிற மதத்தினரோடு கொண்டிருந்த அணுகு முறைக்கும் குந்தகம் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது என்பதை நடுநிலையான கிறிஸ்தவர்கள் உணரத்தான் செய்கிறார்கள்.
இவற்றைப் போன்றுதான் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள்களை அருந்தி விட்டு வீட்டிலும் ரோட்டிலும் ஆர்ப்பாட்டம் செய்தால்தான் ஓணமும் கிறிஸ்மஸ்சும் வந்து விட்டது என அறிவார்கள் என ஆண்களும் இளம் தலைமுறையிலும் நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். இது உண்மை என்பதை நிருபிப்பதற்கு இன்றைய டாஸ்மாக் கடைகளின் வியாபார விகிதமே சான்றாகும்.
டாஸ்மாக் கடைகளில் கிறிஸ்மஸ்சிற்கு முந்தய நாள் விற்பனையும் அன்றைய நாள் விற்பனையும் பிற நாள்களின் விற்பனையை விட பத்து மடங்கு அதிகம் என்பது அவற்றின் விற்பனை கணக்கீடு தரும் புள்ளி விவரம். இதே நிலைதான் ஓணப் பண்டிகையன்றும் நடைபெறுகிறது என்பதொன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.
இப்படி கிறிஸ்மஸ் பண்டிகையானது தற்போது வீடுகளில் புல்குடில் அமைப்பதிலிருந்து தொடங்கி… பஜனைப் பாடுவதில் தொடர்ந்து… கொண்டாட்டம் வரையிலும் பல்வேறு பரிணாம மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அபரிதமாக உயர்ந்துள்ளது. இம்மாற்றங்களும் உயர்வுகளும் ஒரு போதும் அந்த மானிடத்தின் மணிமகுடத்தின் மாண்புக்கு மாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்றால் மட்டுமே கிறிஸ்தவத்தின் விழுதுகள் மேலும் மேலும் விடர்ந்தெழும்.
No comments:
Post a Comment