Monday, 30 December 2013


 

                                      தமிழ் மணம் கமழும் வெள்ளிப்பல்லக்கு

 

 

           வெள்ளிப்பல்லக்கை கண் கலங்க மனம் வெதும்ப சுவைத்தேன்.    இது   உம்மால்தான் நடந்ததா? இல்லை அந்த கம்பன்தான் தங்கள் கனவில் எழுந்தருளி எழத வைத்தானா? இயம்புங்கள் புலவரே இப்படைப்பின் இரகசியத்தை.

    

           தமிழ் மணம் கமழும் வெள்ளிப்பல்லக்கில் சொல்லாடல் ஆற்றுப் பெருக்கெடுத்தல்லவா ஓடுகின்றது? தமிழின் சுவையை, இனிமையை, அருமையை இதில் அறியார் வேறெங்கு அறிவார் அவ்வளவு அருமை! இனிமை! எளிமை!

    

          நாவலின் நுழைவாயில் தொடங்கி இறுவாயில் வரை படிப்போரை தமிழ் பசியாற்றவல்லவா செய்கின்றது.

    

          புலவரே! இப்படைப்பின் மூலம்  வெள்ளிப்பல்லக்கு கம்பனுக்கு மட்டுமல்ல உமக்கும்தான் காத்திருக்கின்றது.

    

          கவிச்சக்கிரவர்த்தி கம்பன் சோழநாடு மட்டுமன்றி சேரநாட்டிலும் கன்னல் தமிழால் கலைமகளையும் காட்சி தரச்செய்து கவியரசரனார் என்று பைந்தமிழையும் வெள்ளிப்பல்லக்கிலேற்றி படிப்போரைப் பரவசப்படுத்தியுள்ளீர்.

 

         மேலும் இன்னமுதச் சுவை நூல்கள் பலவும்  படைத்திட வாழ்த்துகிறேன்.

 

 

நூல் குறிப்பு:

 

 

                வெள்ளிப்பல்லக்கு என்பது புலவர் கு. இரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்ட கம்பன் பற்றிய ஒரு வரலாற்றுப் புதினமாகும்.  இதன் விலை ரூ.100/-   கிடைக்கும் இடம்:  சிவசக்தி கம்ப்யூடர்ஸ், மார்க்கெட்ரோடு, மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு 9487653265.

 

 

 

 

 

 

 

               
 





Open

 

No comments:

Post a Comment