இறைவா
ஈன்றவள் அன்னை
அடை.யாளம் தெரிகிறது
அன்பே
என்றென்னை அணைத்தார்
அப்பா
முகம் பார்க்க முடிகிறது
இருவரும் இணைந்து
இறைவா என்றழைக்க
அங்கும் இங்கும்
எங்குமாய்
என் பார்வை விசாலமாய்...
செவிகள் கூர்மையாய்...
ஓ
உனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...
ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...
இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்.... !