Monday, 21 March 2011

காதல்

           காதல்

           காதல்
           உத்தம உள்ளங்களின்     
           நித்திய சங்கமம்

Monday, 7 March 2011

இறைவன்

இறைவா
ஈன்றவள் அன்னை
அடை.யாளம் தெரிகிறது
 அன்பே
என்றென்னை அணைத்தார்
அப்பா
முகம் பார்க்க முடிகிறது
 இருவரும் இணைந்து
இறைவா என்றழைக்க
அங்கும் இங்கும்
எங்குமாய்
என் பார்வை விசாலமாய்...
செவிகள் கூர்மையாய்...


உனக்கு
உருவமில்லையா
அதனால் தான்
நீ
ஆவியானவராய்...
ஆதியந்தமற்றவராய்...

ஏகத்துவமானவராய்...
தூணிலும் துரும்பிலுமாய்...

இறைவா
இப்போது
நீ
என் இதயத்திலும்....
 
!