Tuesday, 28 April 2020
Friday, 24 April 2020
Tuesday, 21 April 2020
குடிப்பழக்கத்தை அடியோடு ஒழிக்க என்ன செய்யலாம்?
குடிப்பழக்கத்தை அடியோடு ஒழிக்க என்ன செய்யலாம்?
- April 20, 2020
- April 20, 2020
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
பல மணிநேரமானாலும் மக்கள் காத்து நின்று அவருடையக் காய்கறிக் கடையிலிருந்துதான் அவரவருக்குத் தேவையானக் காய்கறிகளை வாங்கிப்போவார்கள். அவ்வளவு நாணயமானவரும், பண்பாளரும் அவர். பள்ளிப்படிப்பு அதிகம் இல்லையென்றாலும் கணக்குவழக்கிலும், பழக்கவழக்கத்திலும் அவ்வளவுக் கெட்டிக்காரர். சிறுவயத்திலிருந்து இந்த வியாபாரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், வேறு எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாததாலும் அனைவரிடத்திலும் நல்லப்பெயர் வாங்கி விட்டார். கூடவே கொஞ்சம் சம்பாதித்தும் விட்டார்.
பல மணிநேரமானாலும் மக்கள் காத்து நின்று அவருடையக் காய்கறிக் கடையிலிருந்துதான் அவரவருக்குத் தேவையானக் காய்கறிகளை வாங்கிப்போவார்கள். அவ்வளவு நாணயமானவரும், பண்பாளரும் அவர். பள்ளிப்படிப்பு அதிகம் இல்லையென்றாலும் கணக்குவழக்கிலும், பழக்கவழக்கத்திலும் அவ்வளவுக் கெட்டிக்காரர். சிறுவயத்திலிருந்து இந்த வியாபாரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், வேறு எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாததாலும் அனைவரிடத்திலும் நல்லப்பெயர் வாங்கி விட்டார். கூடவே கொஞ்சம் சம்பாதித்தும் விட்டார்.
என்ன நடந்ததோ ஏது நடந்ததோ பாழாப்போன டாஸ்மாக்கடை வந்ததும் இந்த கொரோனா வைரஸ் தாக்கியதைப் போன்று அவரையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பழக்கம் கடுமையாகக் கௌவிக்கொண்டது. தான் எந்தக் கடையில் இருந்து காய்கறி வியாபாரத்தைச் செய்தாரோ அதேக் கடையின் முன் பிறந்த மேனியாகக் கிடக்கும் அளவுக்கு முழு நேர குடிகாரராக மாறிவிட்டார். பலமணிநேரம் காத்து நின்று காய்கறி வாங்கிச் சென்றவர்களெல்லாம் காறி உமிழ்ந்து விட்டுச் செல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள குடும்பமும் நாசமாகி நடு ரோட்டுக்கு வந்து விட்டது.
“உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர்.” என இவருக்காகத்தான் அந்தப் பொய்யாமொழிப் புலவர் இப்படி எழுதியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.
இது எங்க ஊரிலுள்ள ஒருவருக்கு டாஸ்மாக்கினால் ஏற்பட்டப் பரிதாப நிலை. இதே நிலைத் தமிழகம் முழுவதும் எத்தனை எத்தனையோ பேருக்கு ஏற்பட்டிருக்கும் எனப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பாழாகிப் போகும்.
என்னடா எங்கேயோ சுற்றி வளைக்கிறார் என நினைக்கிறீர்களா? இதோ வாரேன் உண்மையான விஷயத்துக்கு. கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுண் வந்ததும் தமிழகத்திலுள்ள அத்தனை டாஸ்மாக் கடைகளோடு சேர்த்து அனைத்துப் போதைப் பொருள்கள் விற்கும் கடைகளும் குளோசாகி விட்டன. எப்பொழுதும், போதையே போஜனம் என்றிருந்தவர்கள் எல்லாம் வேதனைக்குள்ளானார்கள். கூடவே வீட்டுக்குள்ளையே அடைக்கலமாகி விட்டார்கள்.
இதுவரையிலும் குறிப்பிட்டிருக்கும் இந்த லாக்டவுண் முடியும் போது சரியாக நாற்பது நாள்களாக இவர்கள் குடிப்பதற்கு வழியின்றித் தவிக்க வேண்டியதுதான். இந்த நாற்பது நாள்களும் முடியும் போது இவர்கள் அப்படியே முற்றிலுமாக அந்தப் பழக்கத்தை மறந்து நல்ல மனிதர்களாக மாறவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என நினைத்தப் போதுதான் கன்னியாகுமரி மாவட்டம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நல்ல ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கிவருபவருமான டாக்டர் எஸ்.எம். டயானா ஷாலின் நினைவுக்கு வந்தார்கள்.
அவர்களிடம் சென்று இந்த குடிபழக்கத்திற்கு ஆளானவர்கள் இனி லாக்டவுண் முடிந்த பிறகுக் குடிப்பழக்கத்தை முற்றிலுமாக மறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டதற்கு;
“பல ஆண்டுகளாக மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்கள் கண்டிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, கேன்சர், மன அழுத்தம் உள்ளிட்டப் பல விதமான நோய்களுக்கு ஆளாகியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை உடனடியாக, முற்றிலுமாக இந்தப் பழக்கத்திலிருந்து மாற்றிக் கொண்டு வருவது சற்று கடினமானது. இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்குள் என்ன நோய் தொற்றியிருக்கிறது என்பதை ரத்தப்பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற சிகிச்சை முறையை இப்பொழுதே தொடங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர்களிடம் ஒருவேளை இம்மாதிரியான நோய்கள் தொற்றிக் கொள்ளாதவர்கள் எப்படி நிறுத்திக் கொள்ளலாம்? எனக் கேட்டதற்கு; கரிசலாம்கண்ணி, கீழாநெல்லி போன்ற மருத்துவக் குணம் மிகுந்த பச்சிலைகளின் சாறும் நெல்லிக்காய் சாறும் குடிக்கலாம் கூடவே பல வகையான நாட்டு மருந்துகளும், கஷாயங்களும் உள்ளன அவற்றைக் குடித்து வந்தாலும் இப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி விடுவதற்கு முடியும்” என்றார்.
மேலும் “இப்பொழுது அவர்கள் வீட்டிலையே அடங்கியிருக்கும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் அவரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டதற்கு; இப்பெழுது இவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான கோபம் உடையவர்களாகவும், சரியான தூக்கமின்மையும், பசியின்மையும் உடையவர்களாகவும் இருப்பார்கள். அதனால் வீட்டிலுள்ள பெற்றோர் அல்லது மனைவி, பிள்ளைகளானாலும் மிகவும் கவனமாகவும் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் இதற்கு முன் குடித்துவிட்டு, வீட்டில் செய்த தவறுகளையும் கொடுமைகளையும் எடுத்துக்கூறி, அவமானப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு அதிகமான அன்பும், அரவணைப்பும் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களை முற்றிலுமாக மாற்றி எடுப்பதற்கு முடியும்” என்றார்கள்.
மேலும், இவர்களின் நண்பர்களிடம் அதிகமான சகவாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு குடிபழக்கத்திற்கு ஆளானவர்களும் இனி எந்த சூழ்நிலையிலும் நான் குடிக்க மாட்டேன் என்ற உறுதியோடு இருக்க வேண்டும். மேலும் இனி என்னால் குடிக்காமல் இருக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனநிலைக்கு வந்தால் எப்படிப்பட்டப் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அதிலிருந்து மீண்டு இயல்பான வாழ்க்கைக்கு வரமுடியும்” என உறுதிபடக் கூறினார்.
தற்பொழுது மது பழக்கத்திற்கு ஆளானவர்கள் பற்றி, உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு நேரத்தில், அதிகம் மது அருந்துவது உடல்நலப் பாதிப்புகள், துணையுடன் சண்டை, மனநலப் பிரச்னை, வன்முறைப் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மது அருந்துவதால் கொரோனா தொற்று ஏற்படாது என்பது தவறானச் செய்தி. அதிகம் மது அருந்துபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. மதுவால் உலகம் முழுவதும் ஆண்டிற்கு 30 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே அரசாங்கங்கள் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
எனவே தமிழக அரசு, இந்த லாக்டவுண் முடிந்த பிறகும் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல், நிரந்தரமாக மூடிவிட்டது என்றால் அது வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுடையதாக இருக்கும்.
( இக்கட்டுரை ietamil E Journal இல் பிரசுரமானது. )
Monday, 20 April 2020
Saturday, 18 April 2020
Friday, 17 April 2020
Tuesday, 14 April 2020
Sunday, 12 April 2020
Thursday, 9 April 2020
பொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்
பொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்
- April 08, 2020
- April 08, 2020
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
அன்று காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, தனக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்த கடிதங்களைப் பிரித்துப் படிப்பதில் மும்முரமாக இருந்தார் அந்தப் பெரியவர்.
அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில், உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் மூன்று நான்கு இராணுவ அதிகாரிகள் துமு… துமு… என அந்தப் பெரியவரின் வீட்டிற்குள் புகுந்து, ‘இந்திய இராணுவ தலைமைத் தளபதிக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு நீ என்ன பெரிய ஆளா இல்ல தீவிரவாதியா? எதற்காக அவருக்குக் கடிதம் எழுதினாய்? இது மாதிரி வேறு யாருக்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கே? எல்லாத்தையும் காட்டு. இல்ல.. இப்ப என்ன நடக்குமெண்ணுத் தெரியாது’ எனக் கொந்தளிக்க…
அந்தப் பெரியவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் நிற்க, அப்பொழுது கூடவந்த உள்ளூர் போலீஸ் அதிகாரி கொஞ்சம் நிதானமாக ‘நீங்க இந்திய இராணுவத் தலைமைத் தளபதி என்.சி.விஜூ அவர்களுக்கு, அவரின் கொயெழுத்துப் போட்ட போட்டோ அனுப்பி வைப்பதற்காக லெட்டர் எழுதியிருக்கீங்க, அது எதற்காக என விசாரிப்பதற்காகத் தான் இவர்கள் வந்துள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார். அதன் பிறகுதான், அந்தப் பெரியவர் கொஞ்சம் நிதானமாகி ஓகோ… இதுதான் விஷயமா எனக் கேட்டுக்கொண்டு வந்தவர்களை விருந்தாளிகள் போல் உபசரிப்பதற்குத் தொடங்கியுள்ளார் அந்தப் பெரியவர்.
என்ன இது திகில் கதையாக இருக்கிறது விஷயத்துக்கு வாருங்கள் என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இனி விஷயத்திற்குள் வருகிறேன். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை யாரைப் பார்த்தாலும் சாதாரணமாக எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி பொழுதுபோக்குக்காக என்ன செய்கிறீங்க? என்பதுதான். அதற்குக் கிடைக்கும் பதில் சினிமா பார்ப்பது… பாட்டுக் கேட்பது… பேஸ்புக், வாட்ஸ்அப் நோண்டுவது… இப்படித்தான் பெரும்பாலானவர்களிடத்திலிருந்து பதில் வரும்.
இதையும் தாண்டி எங்கோ ஒருசிலரிடமிருந்துதான் தபால்தலைச் சேகரிப்பது, பழங்கால நாணயங்கள் சேகரிப்பது, புத்தகம் படிப்பது இதுபோன்றப் பதில்கள் வரும். ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒருவர், நான் உலகத் தலைவர்களின் புகைப்படத்தை, அவர்களின் கையெழுத்தோடு வாங்கிச் சேகரிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன் எனக் கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படியும் ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சார்ந்தவர் மதிமயக்கும் பெருமாள். தற்போது மார்தாண்டம் அருகே திருவட்டாரில் வசித்து வருகிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த இவர், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜரிடமிருந்து, அவரின் கையெழுத்திட்டப் புகைப்படத்தை அனுப்பி வைப்பதற்குக் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதி சரியாக 15 நாளில் அவரிடமிருந்து, கையெழுத்திட்டப் புகைப்படம் வந்து சேர்ந்துள்ளது.
அதிலிருந்து தொடங்கிய இந்த கையெழுத்திட்டப் புகைப்படம் சேகரிக்கும் பழக்கம், பிறகு மாநிலம் தாண்டி, நாடாகி இன்று உலக நாடாகியுள்ளது. இன்று உலக அளவில் அரசியல், ஆன்மீகம், அறிவியல் கலை, இலக்கியம், விளையாட்டு, சினிமா, வணிகம், பொருளாதாரம், விண்வெளி, ஆட்சி, அதிகாரிகள் எனப் பல்துறை சார்ந்த சுமார் நாலாயிரம் பிரபலங்களிடம், அவர்களின் கையெழுத்திட்ட புகைப்படங்களைச் சேகரித்து, அதன் மூலம் லிம்கா சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்து, அடுத்து உலகச் சாதனையாளர் புத்தகமான கின்னஸில் இடம் பிடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் இந்த மதிமயக்கும் பெருமாள் அவர்கள்.
‘உங்களுக்கு எப்படி இப்படியொரு வித்யாசமான ஐடியா வந்தது?’ எனக் கேட்டதற்கு அவர், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் படித்த ஒரு மாணவன் தபால்தலைச் சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தான். அவன் கொண்டு வரும் தபால்தலைகளைப் பார்த்து விட்டு ஆசிரியர்கள் அவனைப் பயங்கரமாகப் பாராட்டுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்குள்ளேயும் இது போன்று ஏதேனும் வித்யாசமாகச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. அப்படித் தொடங்கியதுதான் இந்தப் பழக்கம்” எனக் கூறினார்.
’எப்படி லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ”நான் இதுவரை சுமார் நான்காயிரம் உலகப் பல்துறைப் பிரபலங்களிடமிருந்து, அவர்களின் கையெழுத்திட்டப் புகைப்படங்களைச் சேகரித்துள்ளேன். அவை அனைத்தும் தபால் மூலமாகவே சேகரித்துள்ளேன். அதற்காகத்தான் எனக்கு லிம்கா விருது தந்துள்ளார்கள்’ என மகிழ்ச்சியோடு பதிலளித்தார்.
இதுவரை நீங்கள் கையெழுத்திட்ட புகைப்படம் சேகரித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாரெல்லாம்?’ என்றதற்கு ‘எனக்குப் புகைப்படம் அனுப்பித் தந்தவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிடத் தக்கவர்கள் தான். என்றாலும் நெல்சன் மண்டேலா, பிரிட்டீஷ் இளவரசி டயான, கம்ப்யூட்டர் நாயகன் பில்கேட்ஸ், போப் ஜான்பால், தலாய் லாமா, மைக்கேல் ஜாக்சன்’ இப்படி மூச்சுவிடாமல் அடிக்கிக் கொண்டே போனார். அதை கேட்கும் போது நமக்கே போதும் போதும் என்றாகி விட்டது.
‘இதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?’ எனக் கேட்டதற்கு, ”இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த என்.சி.விஜூ அவர்களுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதுவது போல் புகைப்படம் கேட்டு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தேன். கடிதம் எழுதியச் சில நாள்கள் கழிந்து, போட்டோவிற்குப் பதில் ஒரு நாள் போலீஸ் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் என்னை ஒரு தீவிரவாதி எனக்கருதி, எனது வீட்டிற்கு விசாரணைக்காக வந்தார்கள். வந்த வேகத்தில் அவர்கள் ஒரு தீவிரவாதியிடம் எப்படி விசாரணை நடத்துவார்களோ அதுபோல் மிகவும் கடுமையாக விசாரித்தார்கள். அதன் பிறகு உண்மையை அறிந்து, விசாரணைக்காக வந்தவர்கள் என்னை மிகவும் பாராட்டி நல்ல நண்பர்களாகி விட்டார்கள். அது எனக்குக் கிடைத்த வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும்” என தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
‘லிம்கா சாதனையைப் போன்று வேறு ஏதேனும் சாதனைக்குத் தயாராகிறீர்களா?’ எனக் கேட்டதற்கு, ”அடுத்து உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் சாதனைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஐநூறு பிரபலங்களின் கையெழுத்துப் போட்டப் போட்டோ தேவைப்படுகிறது. அதையும் மிக விரைவில் பெற்றுவிடுவேன். அதன் பிறகு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என மிகவும் உற்சாகமாகக் கூறினார் மதிமயக்கும் பெருமாள் அவர்கள்.
இந்த வித்யாசமான பொழுதுபோக்கால் இன்று உலகச் சாதனைப் படைக்கக் காத்துக் கொண்டிருக்கும் இவரை நாமும் திறந்த மனதோடு பாராட்டுவோம்.
(இக்கட்டுரை ietamil E Journal இல் பிரசுரமானது)
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
Monday, 6 April 2020
Saturday, 4 April 2020
Friday, 3 April 2020
கொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்
கொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்
- April 03, 2020
- April 03, 2020
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
சாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
சாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
அப்பொழுதெல்லாம் அதை நாம் பொருட்படுத்தாமல் சென்று விடுவோம். ஆனால், இந்த கொரோனா பீதியினால் நடந்திருக்கும் சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்கும் போது மக்கள் கூறுவதை நம்மால் கூட நம்பாமல் இருப்பதற்கு முடியவில்லை. அப்படி என்னதான் நடந்து விட்டது என்கிறீர்களா இதோ மேலே படியுங்கள் அப்பொழுது புரியும்.
கொரோனா வைரசால் எற்பட்டிருக்கும் ஊரடங்கினால், உங்களைப் போன்று நானும் இல்லத்திலிருக்கிறேன்… தனித்திருக்கிறேன்… தள்ளியிருக்கிறேன்… ஆனால் தினமும் குறைந்தது ஐந்து பேரிடமாவது செல்போனில் நலம் விசாரித்து வருகிறேன். அப்படி நலம் விசாரித்ததில் இவ்வளவு நாள்களுக்குள் மூன்று பேரிடமிருந்து கிடைத்த நெஞ்சை உலுக்கும் மூன்று உண்மைச் சம்பவங்களைத்தான் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது நெருக்கமான நண்பர் ஒருவர். நன்றாகப் படித்தவர், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் மிக்கவர். தனது மகளுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மணமகனைப் பார்த்துத் திருமணப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடித்து விட்டார். அதோடு திருமண நிச்சையார்தத்தையும் ஒரு திருமண மண்டபத்தில் பலர் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடத்தி முடித்தார். அதோடு வரும் மே மாதம் திருமணம் நடத்துவது என்றும் முடிவு செய்து அதற்காக திருமண மண்டபவம் புக்கிங் செய்ததோடு, மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கொரோனா வைரசினால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டவுடன் அந்த மணமகனின் வீட்டார், எனது நண்பரிடம் ‘இந்தத் திருமணம் நடக்காது. அதனால் மேற்கொண்டு, இனி எங்களிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். எதனால், இப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு ‘இந்தத் திருமணம் நிச்சையித்தப் பிறகு நாட்டில் இப்படியொரு நிலை வந்திருப்பது அபசகுனமாகும். அதனால், இந்தத் திருமணம் நடந்தாலும் பிறகு மணமக்களுக்குள் ஏதேனும் துயரச் சம்பவம் நிகழ்ந்து விடும். அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளோம்.’ என சிறிதும் நா கூசாமல் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டதும் எனது நண்பர் வேதனையிலும் வேதனையடைந்துள்ளார். இவ்வளவும் பேசி முடிப்பதற்குள் அவர் போனில் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்து கதறி கதறி அழுத அழுகை என் நெஞ்சை உலுக்கியது. நானும் அவரை சமாதானப் படுத்துவதற்கு வார்த்தைகள் இன்றி மௌனமாகிப் போனேன். அந்த மௌனம் அன்று ஒரு நாள் முழுவதும் என்னை முடமாக்கிப் போட்டது.
அடுத்த நாள் என்னை நானே தேற்றிக் கொண்டு, எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு இதைப் போன்று போன் செய்து ‘என்ன சார் எப்படி இருக்கீங்க, கொரோனா தொற்றாம வீட்டில தானா இருக்கீங்க, இல்ல எங்கையாவது ஊர் சுற்றீட்டிருக்கீங்களா?’ எனக் கொஞ்சம் ஜாலியாகவே பேச்சை ஆரம்பித்தேன். ஏனென்றால் அவரும் ஒரு ஜாலியான மனிதர் தான்.
நான் இவ்வளவும் பேசி முடித்தப் பிறகும் மறுமுனையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. நானும் பயந்துபோய் ‘என்ன சார் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போனை சும்மா வச்சுகிட்டு வேடிக்கைப் பாக்கீங்களா?’ எனக் கேட்டேன். அவ்வளவுதான் மறு முனையிலிருந்து ஒரு விம்மல் சத்தம் வந்தது. எனக்கு இன்னும் பயம் அதிகமாகி ஏன் என்ன நடந்தது? எனப் பரபரப்போடுக் கேட்கத் தழுதழுத்தக் குரலில் அவர் சொன்னார் ‘என் மனைவி என்ன விட்டுவிட்டு இரண்டுக் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா’ அவ்வளவுதான் அதுக்கு மேல் அவரால் எதுவும் பேசவே முடியவில்லை. அப்படியே போனை வைத்து விட்டார்.
நானும் சிறிது நேரம் அமைதியாகி விட்டு என்ன நடந்திருக்கும் எனச் சிந்தனையில் அமர்ந்தேன். சுமார் 15 நிமிடங்கள் தாண்டி அவரிடமிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். அவர் பேச்சைத் தொடங்கினார், ‘என் மனைவிக்கிட்ட யாரோ சொன்னாங்களாம் குடிகாரங்க இருக்கிற வீட்டிலப் பிள்ளைகள வச்சிருந்தா கொரோனா நோய் தாக்கும் என்று, அதனால், அவ என்ன விட்டிட்டுப் போயிட்டா. எனக்குச் சமையல்னா என்ன என்றே தெரியாது. வீட்டிலக் குடிக்கக் கூடத் தண்ணி எங்க இருக்கும் என்று கூடத் தெரியாது. வெளியப் போய் சாப்பிடலாமெண்ணா, அதுக்கும் முடியாது. அப்புறம் எப்படித்தான் இவ்வளவு நாளையும் சமாளிக்கப் போறேனோ’ என்று கூறிவிட்டு மீண்டும் அழுவதற்கு ஆரம்பித்தார்.
அவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஓர் அரசாங்க ஊழியர். ஆனால், கொஞ்சம் அதிகமாகவே குடிப்பழக்கம் உடையவர். அனைவரிடமும் நன்றாகப் பழகும் தன்மை உடையவர். திருமணமாகி இரண்டுக் குழந்தைகள். யரோ மனைவியிடத்தில் தவறுதலாக குடிகாரன் இருக்கும் வீட்டில் இருந்தால் கொரானே நோய் வரும் எனத் தவறுதலாகக் கூற இந்த இக்கட்டான நேரத்தில் அவரை தவிக்க விட்டுவிட்டுச் சென்றிருப்பது என்ன நியாயம்? என்பதைத் தான் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
என்னதான் நடந்தாலும் எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் எனக்கருதி அடுத்த நாளும் ஐந்து பேரிடம் பேச வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதைப்போன்று தொடர்ந்தேன் ஒன்று முதல் நான்கு வரை எந்தப் பிரச்னையும் இல்லை. மனதிற்குள் மிக்க மகிழ்ச்சி, இன்று யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
கடைசியாக மாலையில் டீ குடித்துவிட்டு, ஒரு உறவினர், சமுதாயத்தில் பெரும் அந்தஸ்தாகவும் கௌரமாகவும் வாழ்பவர், கல்வி நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களை நடத்தி வருபவர். மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி, தன்னால் இயன்ற அளவிற்குச் சமூகச் சேவையும் செய்து வருபவர். அவருக்குப் போன் செய்தேன். போனை எடுத்து அவர்கள் சொன்ன ஹலோவில் வழக்கமானத் தெம்பு இல்லை. அப்போதே நினைத்தேன் இங்கே ஏதோ கொரோனா இருக்கிறது என்று.
‘எப்படி இருக்கீங்க, என்னக் குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது?’ என்றேன். அவ்வளவுதான், என்ன நடந்தது என்பதைச் சுற்றி வளைக்காமல் அவர்கள் சொன்ன விஷயத்திற்கு அப்படியே வருகிறேன். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகனுக்கு சுமார் இரண்டு வயது பருவத்தில் ஒரு குழந்தை உண்டு. மருமகள் கொஞ்சம் நாளாக தனது தாயாரின் வீட்டில் குழந்தையுடன் நிற்கிறார்.
ஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்த மறுநாள் இவர்கள், தமது பேரப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம் என நினைத்து, தனது மருமகள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் சென்றதும் பேரப்பிள்ளை வீட்டின் முன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. பாட்டியைப் பார்த்ததும், குழந்தை அவர்கள் பக்கத்தில் வந்துள்ளது. அவர்களும் குழந்தையைத் தூக்கி எடுத்துள்ளார்கள். அவ்வளவுதான் உடனே வீட்டின் உள்ளே இருந்து மருமகள் ஓடி வந்திருக்கிறாள். மாமியாரின் கையி்ல் இருந்தக் குழந்தையை அப்படியே பிடித்து இழுத்து எடுத்திருக்கிறாள்.
அதோடு மட்டும் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லாமல் இருந்திருக்கும். அதற்கும் ஒருபடி மேலே சென்று ‘உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா? நீங்க ஊரெல்லாம் சுற்றி வரக்கூடியவங்க… அப்படி ஊர் சுற்றி வந்து விட்டு, இப்படிச் சின்னக் குழந்தைகள எடுத்தா அதுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுங்கிறது உங்களுக்குத் தெரியாதா? எனக் கூறிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறாள். அந்தக் குழந்தையோ தாயின் கையில் இருந்து கொண்டே பாட்டியிடம் செல்வதற்காகக் கையை நீட்டியப் படியே பாட்டி.. பாட்டி… எனக் கதறி அழுதுள்ளது.
இப்படியொரு சம்பவத்தைச் சிறிதும் எதிர்பாராத அவர்கள் அப்படியே கற்சிலை போல் ஒருசில நிமிடங்கள் அங்கே நின்றுள்ளார்கள். அப்புறம் உடல் நடுநடுங்க காரில் ஏறி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீட்டில் படுத்தப் படுக்கையாக உள்ளார்கள். நாள்கள் சில கடந்த பின்பும் அவர்களின் கவலையும் கண்ணீரும் இன்னும் தீர்ந்த பாடில்லை என்பதுதான் உண்மை.
இந்த மூன்று உண்மை சம்பவங்களும் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதை எல்லோரும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்த உலகம் உறவுகளால் பின்னிப் பிணைந்துள்ளது. அதுமட்டுமல்ல உறவுகளையும் தாண்டி உணர்வுகளால் கட்டி உயர்த்தப்பட்டக் கோபுரங்களையும் தாண்டி உயர்வானது. உறவுகளையும், உணர்வுகளையும் தாண்டி இந்த உலகம் எள்ளளவும் அசையாது என்பதை இந்த இக்கட்டான நேரத்திலாவது அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுதுதான் புரிகிறது ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும். ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது.’ என்று ஊரார் கூறும் கூற்றின் உண்மையானப் பொருள் என்னவென்பது.
கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ்
மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
Thursday, 2 April 2020
Subscribe to:
Posts (Atom)