Thursday, 17 January 2019

பொங்கல் சாட்சியாக ஒரு சபதம்!

பொங்கல் சாட்சியாக ஒரு சபதம்!

(இக்கவிதை 16-1-2019 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது)

வானம் பொழிந்து
பூமி செழித்திட வேண்டும்
கரும்பும் மஞ்சளும் கூடவே
விளைந்திட வேண்டும்
உழவனும் குயவனும்
மகிழ்ந்திட வேண்டும்!
O
இல்லம் ஒளிர
வெள்ளை வேண்டும்
வாழைத் தோரணம்
தெருவில் வேண்டும்
குலவை சத்தம்
எங்கும் வேண்டும்!
O
செடியும் கொடியும்
வளர்ந்திட வேண்டும்
ஆடும் மாடும்
பெருகிட வேண்டும்
அன்பும் அறனும்
ஓங்கிட வேண்டும்!
O
அரும் தமிழ் மொழியைக்
பேசிட வேண்டும்
கைத்தறி ஆடையை
அணிந்திட வேண்டும்
நலிந்திடும் நெசவைக்
காத்திடல் வேண்டும்!
O
தைத் திருநாளில்
சபதம் ஏற்போம்!
பொங்கிடும் பொங்கலை
சாட்சியாய் வைப்போம்
மண்ணில் மக்கா நெகிழியை (பிளாஸ்டிக்)
இவ்வையம் விட்டே துரத்துவோமென…!
தையே வருக! தைரியம் தருக!!
--------------------------