குற்றாலதாசன் கவிதைகள்
இதய நண்பர் இனிய நூல் வாழ்க!
இது ஓர் இதிகாசத் தோழமை!
எத்தனை ஜென்மம்
தவம்
செய்தேன்
இப்படியோர்
தோழமைக்கு!
கேரளத்
தலைநகர்
தமிழ்ச்
சங்கத்தில்
கவித்துவம்
ததும்பிய
சொற்பொழிவில்
சொக்கி
நின்றேன் மூச்சற்று!
வானொலி
நிகழ்ச்சியால்
வானுயர்ந்து
நிற்பவர்!
தொலைக்காட்சித்
தொகுப்பால்
உலகறிந்து
ஒளிர்பவர்!
களங்கமில்லாச்
சிரிப்பால்
நீசரையும்
நேசராக்கும்
வல்லவர்!
பேச்சிலும்
மூச்சிலும்
எழுத்திலும்
கவித்துவம்
கரைபுரண்டொழுகுவதால்
நவரச
நாவலர்
நீல
பத்மம்
பத்ம
கவி
கவிமாமணி
அருந்தமிழ்த்
தொண்டன்
என
எத்தனையோ
விருதுகளை
விழுதுகளாக்கியவர்!
முண்டாசுக்
கவிஞனுக்குக்
கண்ணன்போல
என்
குருவாய்
தோழனாய்
அன்பிற்கினிய
அண்ணலாய்
மாசு
கண்ணுறுமிடத்துக்
கடிந்துரைக்கும்
காரணவராய்
இன்னும்.
. .
அவர்தாம்
மாசற்ற
மாமனிதர்
குற்றாலம்
ஐயாவின்
தாசன்
குற்றாலதாசன்!
குகனொடு
இராமன்
கொண்ட
தோழமை
போல்
எளியேன்
மேல்
பாசமுற்று
பரிவுற்று
ஏற்படுத்திய
தோழமை!
இது
ஓர்
இதிகாசத்
தோழமை!
உதட்டோரம்
சொல்வதன்று!
உணர்ச்சி
வயப்பட்டு
எழுதுவதுமன்று!
ஊனோடும்
உயிரோடும்
உறவாடும்
தோழமை!
இது
ஊரார்
உலகார்
அறிந்த
தோழமை!
ஊனுயிர்
உள்ளளவும்
நீடித்து
நிற்கும்
தோழமை!
குற்றாலதாசன்
கவிதை
நூலுக்குத்
தோழமையுரையாய்
எழுதுகிறேன்
உத்தமர்
இவர்தம்
கவிதையெல்லாம்
முக்கனிச்
சாறாய்
இனிப்பதினால்.
. .
பள்ளிப்
பிள்ளைகள்
படித்திடவும்
பல்கலை
மாணவர்
ஆய்ந்திடவும்
விருதுகள்
பற்பல
பெற்றிடவும்
பண்டிதர்
பலரும்
பரிந்துரைப்பார்!
பித்தன்
அடியேன்
பிதற்றுகின்றேன்
சத்தியமிது
சாத்தியமே!
கவிஞர் கே.என். பெருமாள் எழுதிய குற்றாலதாசன் கவிதைகள் என்னும் கவிதை நூலுக்காக எழுதிய வாழ்த்துரை.
நூல் குறிப்பு:
குற்றாலதாசன் கவிதைகள் என்னும்
இந்நூலின் ஆசிரியர் பத்மகவி கே.என். பெருமாள் ஆவார்.
நூலின்
விலை:ரூ.250/-
நூல்
கிடைக்குமிடம்: கிருஷ்ணமணி நிலையம்
வர்த்தகநாடார் குடியிருப்பு,
கட்டிமாங்கோடு அஞ்சல்
629 806,
கன்னியாகுமரி மாவட்டம்.
செல் 9445209368, 9445878741
Gmail kn.perumal
yahoo.in