Friday, 31 January 2014

யார் இவர்… ?


                       யார் இவர்… ?

 

      பேச்சை மூச்சாகவும்

      எழுத்தை வாழ்க்கையாகவும்

      அழிவில்லா ஆன்மீகத்தை

      அகிலமெல்லாம் பரப்ப

      ஆர்வம் கொண்டவரும்தான்

      அன்புச் சகோதரர்

      வின்சென்ட் அல்போன்ஸ் அவர்கள்…!

 

      இவர் குமரியின் முத்து

      அருமனையின் சொத்து

      இவர் சார்ந்தது கிறிஸ்தவம்

      உணர்ந்தது சர்வமதம்…!

  

      கவலை முதலாய்

      எகிப்தில் இஸ்ரவேலர் ஈறாய்

      முத்தாய் மூவிரு புத்தகம்

      எழுதி வெளியிட்டுள்ளார்…!

 

      மறைநூற்கள் கூறும்

      மதுவின் கொடுமையை

      தொகுத்து நமக்கு

      அனுபவத்தோடு ஆய்ந்து

      அருமருந்தாய் தந்துள்ளார்…!

 

      மதுவும் மாயையுமென

      இவர் ஆராய்ந்தறிந்த

      அறிவுரையை சிரமேற் கொள்வோம்…!

 

      மானுடம் அழிக்கும்

      மதுவை ஒழித்திட கரம் கோர்ப்போம்

      தொடர்ந்து இவர் எழுதிட

      இணைந்தே உதவிடுவோம்…!

 

நூல் குறிப்பு:

 

     மதுவும் மாயையும் என்னும் கட்டுரை நூலை ஆக்கியோன் சி. வின்சென்ட் என்ற அல்போன்ஸ் ஆவார். கட்டடச் சிற்பியான இவர் இதற்கு முன்பு ஐந்து புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது ஆறாவது புத்தகமாக மதுவும் மாயையும் என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தின் பின் அட்டையில் ஆக்கியோனை அறிமுகம் செய்து எழுதப்பட்டதுதான் யார் இவர்…?என்னும்இக்கவிதை.

    
                              இந்நூலின் விலை ரூ.100.  நூல் கிடைக்குமிடம்:

சி. வின்சென்ட், ஒற்றால்விளை, மாத்தூர்கோணம், வெள்ளாங்கோடு, சிதறால் – 629 151, அருமனை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.