மறுமலர்ச்சி வேண்டும் மருத்துவத் துறையில்
இந்தியா, வல்லரசுக் கனவோடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டே
இருக்கின்றது. அதன் வளர்ச்சியின் வேகம்
அண்டை நாடுகளையே அச்சங் கொள்ளச் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடி... தீவிரவாதத்தின் கொடூரம்... இவற்றையெல்லாம்
தகர்த்தெறிந்துவிட்டு விறுவிறுவென விண்ணை முட்டும் வளர்ச்சியைக் கண்டு
கொண்டிருக்கின்றது.
ஆயினும், வானுயர்ந்த மரத்தின் ஆணி வேருக்குள் மண்புழு நுழைந்தது
போன்று சில சிற்றெறும்புகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையிடையே இடையூறு
விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் அடிக்கடி இந்தியாவிற்குள் ஊடுருவும் அநியாயமான நோய்க்
கிருமிகள். எய்ட்ஸ், டெங்கு, எலிக்காச்சல்
சிக்கன்குனியா என அவ்வப்போது இவை இந்தியாவையே குலைநடுங்க வைக்கின்றன.
பண்டைக்காலங்களில், மக்கள் அறிவிலோ, அறிவியலிலோ
அல்லது மருத்துவத்திலோ அந்த அளவிற்கு வளர்ச்சி பெறாதக் காலகட்டத்தில் பெரியம்மை,
தட்டம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் வந்து கிராமம்
கிராமமாக மக்களைத் தாக்கி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்து பின்பு
அந்தக் கிராமங்களே காணாமல் போனதாக வரலாறுகள் கூறுகின்றன.
ஆனால், இன்று நம் இந்தியா அப்படியல்ல.
எத்தனை எத்தனையோ முறைகளில் முன்னேறியிருக்கின்றது. என்றாலும், ஆண்டாண்டு தோறும் ஏதேனும் ஒரு கொடிய
நோய் நம் நாட்டில் பயங்கரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான மக்களைக் காவு
கொள்கின்றது.
இந்த நோய்க் கிருமிகள் ஏன் பரவுகின்றன? எப்படிப் பரவுகின்றன? என்ற
ஆழமான ஆய்வை இன்றுவரை நமது மத்திய, மாநில அரசுகளோ அல்லது மருத்துவ ஆராய்ச்சி
நிறுவனங்களோ மேற்கொண்டதே இல்லை என்பதே நிதர்சனம்.
இப்படிப்பட்ட நோய்கள் பரவும் நேரங்களில், அந்த இடங்களில் மட்டும் ஒரு சில நாள்கள்
மேலோட்டமாக ஏதேனும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு பின்பு அதைப்பற்றிய
எவ்விதச் சிந்தனையுமின்றி அப்படியே கைகழுவி விட்டுவிடுகின்றனர்.
அதன் பின்னர் அந்த நோயினால் பதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆயினர்? அப்பகுதி எப்படியுள்ளது? என்பது பற்றிய எவ்விதமான எண்ணங்களோ அல்லது அது
குறித்தத் தொடர் நடவடிக்கைகளோ அரசிடமிருந்தோ அல்லது மருத்துவ ஆராய்ச்சித்
துறையிடமிருந்தோ இல்லாமல் போவது மிகுந்த வேதனைக்கும் பொறுத்துக் கொள்ள
இயலாமைக்கும் வழிவகுக்கிறது.
மிகக் கொடிய நோய்களான எயிட்ஸ், சிக்கன்குனியா, டெங்குக் காச்சல்,
எலிக்காச்சல் ஆகியவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்தப் பாதிப்புகளிலிருந்து, அவர் மீண்டு
இயல்பான வாழ்க்கைக்கு வருவது மிகக் கடினமாகவே உள்ளது. இந்நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்நாள்
முழுவதும் அதன் பதிப்பு இருந்து கொண்டேதான் இருக்கின்றது. அவை அடிக்கடி அவர்களைப் பெரும் சிரமங்களுக்கு
ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் டெங்குக்காச்சல் பரவியது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் சொல்லொண்ணா
துயரத்தை ஏற்படுத்தியது. இளம் பிஞ்சுகளிலிருந்து முதிர் மனிதர்கள் வரை
நூற்றுக்கும் அதிகமானவர்களின் உயிர்களை இலகுவாகக் ‘காவு’ கொண்டது.
இதனால், பெற்றவர்களும் பேணிக்காத்தவர்களும் துடிதுடித்துப்
போயினர். ஆனால், நமது அரசும் மருத்துவத்
துறையும் கண்மூடி, வாய்பொத்தி மெத்தனமாய் இருந்தன.
இந்தியாவிற்குள் இந்த இழிநிலை இப்போதும் ஏன் நீடிக்கிறது? எத்தனை எத்தனையோ நவீன வாய்ப்புகளையும்
வசதிகளையும் இந்நாடு பெற்றிருந்தும் இன்னும் இன்னுயிர்களை அநியாயமாகக் காவு
கொடுப்பது எந்த வகையில் நியாயமானது?
இந்தியா, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்துபோனப் பின்பும்
இன்னும் இதுபோன்ற நோய்கள் வருவதன் காரணத்தையும் அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான
மருந்து வகைகளையும் கண்டறியாமல் இருப்பது இப்பெரும் நாட்டிற்கும் மாபெரும்
மருத்துவத் துறைக்கும் பெரும் இழுக்கன்றோ?
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பைப் பற்றி
என்னுடைய, ஓர் அறிவு சார்ந்த நண்பரோடு வருத்தம் மெருகேறிய கனத்த
இதயத்தோடு விவாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது, அவர் தமது அறிவு முதிர்ச்சியினால், இந்நோய்கள் பற்றிய சில
ஐயப்பாடுகளை முன்வைத்தார். அந்த
ஐயப்பாடுகள் அனைவருக்கும் நியாயமாகப் படுபவையே ஆகும்.
இந்தியா, மிக விரைவில் வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை நமது அண்டை
நாடுகளுக்கு ஏற்பட்டு விட்டது. இந்த
வளர்ச்சியைப் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட ஐக்கிய அரபுநாடுகள்
எள்ளளவிற்கும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது சகித்துக் கொள்ளவோ தயாரில்லை.
அதனால், இந்தியாவின் பல்துறை வளர்ச்சிக்கு ஏதேனும் விதங்களில்
முட்டுக்கட்டைப் போட்டே ஆகவேண்டும் என்பது அவற்றின் தீர்க்கமான முடிவு. அதற்காக, இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும்
ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் தீவிரவாதத்தையும் பிரிவினை
வாதத்தையும் மூட்டிவிடுதல், மக்களின் ஆரோக்கியத்தையும் இயல்பான வாழ்க்கையையும்
பாதிக்கும் விதத்தில் இது போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் நோய்க் கிருமிகளைப்
பரவச் செய்தல், பொருளாதார வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துதல் போன்ற சதி வேலைகளைச்
செய்து வருகின்றன.
அதனால்தான், இந்தியாவின் கட்டுப்பாடு, கலாச்சாரம், சீதோஷண நிலை இவற்றிற்கு
எவ்வகையிலும் பொருத்தமற்ற இது போன்ற கொடிய நோய்கள் பரவி இந்திய மக்களைக் கதிகலங்க
வைக்கின்றன. எனத் தனது ஐயப்பாட்டை முன்
வைத்தார்.
இது, கோட்பதற்கு வியப்பாகவும் நம்புவதற்குச் சிரமமாகவும் இருக்கலாம். ஆனால், இதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப்
பார்த்தால்தான் அதன் உண்மை நிலைப் புரியவரும்.
நம்
நாட்டில் இருக்கின்ற அறிவாளிகள், அரசின் உளவுப்பிரிவினர் ஏன் இந்தக் கோணங்களில்
சிந்தித்து அவற்றின் உண்மைத் தன்மையினைக் கண்டறியக் கூடாது?
ஒரு
நாட்டின் வளர்ச்சியிலும் மேன்மையிலும் பொறாமை கொள்ளும் பிற நாடுகள் அந்நாட்டைப்
பலவீனப்படுத்தவும் வீழ்ச்சியடையச் செய்யவும் பயன்படுத்தும் உபாயங்கள்
பலவிதமானவை. அவற்றில் இதுவும் ஓர்
உபாயமாகும்.
இந்தத் தந்திரத்தைப் புரிந்து கொண்டு
இவற்றையெல்லாம் தகர்த்தெறியும் சூத்திரமும் புத்திக் கூர்மையும் நம் நாட்டுத்
தலைவர்களுக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வேண்டும். அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு அநியாயமாக
இன்னுயிர்களைப் பலிகொள்ளும் கொடிய நோய்களுக்கு நம் நாட்டிலிருந்து நிரந்திரமாக
விடை கொடுக்கும் திராணியை நம் நாடு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
என்றால் மட்டுமே இதுபோன்ற கொடுமைகளிலிருந்து
நம் நாட்டை விடுவித்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதைகளில் இட்டுச் செல்ல
முடியும். நம் நாட்டை மிக விரைவில் சக்தி
மிக்க வல்லரசாக மாற்றிக் காட்ட முடியும்.
ஃபெட்காட் செய்திகள் ஏப்ரல்-ஜூன் மாத இதழில் பிரசுரமானது.